செய்திகள் மலேசியா
அமெரிக்காவுடன் வரி விவகார பேச்சுவார்த்தை தொடருகின்றது: தெங்கு ஜப்ருல்
கோலாலம்பூர்:
25 விழுக்காடு இறக்குமதி வரி தொடர்பாக அமெரிக்காவுடன் இன்னும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஶ்ரீ ஜப்ருல் அப்துல் அஜிஸ் தெரிவித்தார்.
நாங்கள் இன்னும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது.
இந்த பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் பயனளிக்க வேண்டியது அவசியம் என்று 2025-ஆம் ஆண்டுக்கான சர்வதேசச் சுகாதார வார விழா நிகழ்ச்சியில் தெங்கு ஜப்ருல் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியோனேசியா 19% இறக்குமதி வரி ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளதாக அறிவித்திருந்தாலும் அது குறித்து இந்தோனேடசிய அரசிடமிருந்து எந்தவொரு உறுதிபடுத்தல் தகவல் கிடைக்கப் பெறவில்லை என்றும் தெங்கு ஜப்ருல் சுட்டிக் காட்டினார்.
இந்தோனேசியாவின் அறிவிப்பிற்காகக் காத்திருப்போம் என்று தெங்கு ஜப்ருல் கூறினார்.
மலேசியா தற்போது 25% இறக்குமதி வரி விழுக்காட்டை எதிர்கொள்ளவுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 14, 2026, 11:47 pm
நெகிரி செம்பிலானில் நம்பிக்கை கூட்டணி சார்பில் 5 இந்தியர்கள் போட்டி
July 14, 2026, 5:13 pm
நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த சட்டத் திருத்தம்: மலாக்கா அரசிலிருந்து ஜசெக விலகியது
July 14, 2026, 3:48 pm
மலாக்கா மாநில அரசாங்கத்திலிருந்து DAP கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியேறியது
July 14, 2026, 1:13 pm
சிலாங்கூர் மாநிலத்தில் 5 தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலப்பட்டா: பாப்பா ராய்டு வழங்கினார்
July 14, 2026, 11:42 am
