செய்திகள் மலேசியா
அமெரிக்காவுடன் வரி விவகார பேச்சுவார்த்தை தொடருகின்றது: தெங்கு ஜப்ருல்
கோலாலம்பூர்:
25 விழுக்காடு இறக்குமதி வரி தொடர்பாக அமெரிக்காவுடன் இன்னும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஶ்ரீ ஜப்ருல் அப்துல் அஜிஸ் தெரிவித்தார்.
நாங்கள் இன்னும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது.
இந்த பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் பயனளிக்க வேண்டியது அவசியம் என்று 2025-ஆம் ஆண்டுக்கான சர்வதேசச் சுகாதார வார விழா நிகழ்ச்சியில் தெங்கு ஜப்ருல் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியோனேசியா 19% இறக்குமதி வரி ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளதாக அறிவித்திருந்தாலும் அது குறித்து இந்தோனேடசிய அரசிடமிருந்து எந்தவொரு உறுதிபடுத்தல் தகவல் கிடைக்கப் பெறவில்லை என்றும் தெங்கு ஜப்ருல் சுட்டிக் காட்டினார்.
இந்தோனேசியாவின் அறிவிப்பிற்காகக் காத்திருப்போம் என்று தெங்கு ஜப்ருல் கூறினார்.
மலேசியா தற்போது 25% இறக்குமதி வரி விழுக்காட்டை எதிர்கொள்ளவுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 28, 2026, 5:03 pm
மெனாரா மெர்டேக்கா 118 கட்டிடம் இனி மெனாரா மெர்டேக்கா மேபேங்க் என பெயர்மாற்றம் கண்டுள்ளது
July 28, 2026, 3:45 pm
இஸ்ரேல் நாட்டு பயண ஆவணத்தை மலேசியா அங்கீகரிக்காது: உள்துறை அமைச்சு திட்டவட்டம்
July 28, 2026, 3:15 pm
மாரானில் இரு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சாலை விபத்து: மூவர் பலி, இருவர் படுகாயம்
July 28, 2026, 12:39 pm
