
செய்திகள் மலேசியா
ஷாராவின் மரண விசாரணைக்கு உதவ நோயியல் நிபுணர் உட்பட 70 பேர் அழைக்கப்படுவர்
கோலாலம்பூர்:
ஷாராவின் மரண விசாரணைக்கு உதவ நோயியல் நிபுணர் உட்பட 70 பேர் விளக்கமளிக்க அழைக்கப்படுவர்.
சட்டத்துறை தலைவர் அலுவலகம் ஓர் அறிக்கையில் இதனை தெரிவித்தது.
படிவம் ஒன்று மாணவி ஷாரா கைரினா மகாதீரின் மரணம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அவரை உடலை பிரேத பரிசோதனை செய்த நோயியல் நிபுணர் உட்பட மொத்தம் 70 சாட்சிகள் இப்பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளில் சாட்சியமளிக்க அழைக்கப்படுவர்.
இதில் சாட்சியமளிக்க அழைக்கப்படும் முக்கிய சாட்சிகளில் நோயியல் நிபுணர் ஒருவராவர்.
குறிப்பாக பாதிக்கப்பட்டவரின் மரணத்திற்கான காரணத்தை விளக்க அவர் அழைக்கப்படுவார்.
விசாரணை நடவடிக்கைகளின் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களைத் தயாரித்தல், நடவடிக்கைகளில் ஆர்வமுள்ள தரப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்களுக்கு ஆவணங்களை சமர்ப்பித்தல் உள்ளிட்ட முழுமையான தயாரிப்புகளையும் செயல்பாட்டு அதிகாரிகள் குழு செய்துள்ளது.
கொரோனர் நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டபடி, விசாரணை நடவடிக்கைகளில் ஆர்வமுள்ள தரப்பினரும், கண்காணிக்கும் வழக்கறிஞர்களும் கலந்துகொள்வார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 30, 2025, 10:21 pm
சம்சுல் ஹரிஸின் உடல் பாதுகாப்பாக மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது
August 30, 2025, 9:56 pm
பகடிவதை என்பது நமது கலாச்சாரம் அல்ல: டத்தோஸ்ரீ சரவணன்
August 30, 2025, 2:49 pm
ஊழல், கடத்தல், கும்பல்களிடம் இருந்து விடுபடுவதே உண்மையான சுதந்திரம்: பிரதமர்
August 30, 2025, 2:47 pm
அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் எதிர்க்க இனப் பிரச்சினைகள் எழுப்பப்படுகின்றன: பிரதமர்
August 30, 2025, 2:46 pm
68ஆவது சுதந்திர தினத்தை ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வாழ்த்து
August 30, 2025, 1:07 pm