நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் எதிர்க்க இனப் பிரச்சினைகள் எழுப்பப்படுகின்றன: பிரதமர்

செர்டாங்:

அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் எதிர்க்க இனப் பிரச்சினைகள் எழுப்பப்படுகின்றன.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

மக்கள் நலனை மேம்படுத்துவதற்கான புத்ராஜெயாவின் முயற்சிகளை ஓரங்கட்ட இன ரீதியான பேச்சுக்கள் எவ்வாறு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

அரசாங்கத்தின் முடிவுகளுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த சில தரப்பினர் பெரும்பாலும் இன உணர்வுகளை நம்புகின்றனர்.

சிலாங்கூரில் உள்ள மேப்ஸில் நடைபெற்ற தேசிய தின சிறப்பு உரையில் அவர் இதனை கூறினார்.

ஒவ்வொரு முறையும் ஒரு நியமனம் நடக்கும்போதும், ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப்படும் போதும்),  ஒரு புதிய மசோதா வரும்போதெல்லாம், இனப் பிரச்சினை எழுப்பப்படுகிறது.

இருப்பினும் பெரும்பான்மையான மக்கள் இன்னும் ஞானத்தையும் பகுத்தறிவையும் பயன்படுத்துகிறார்கள்.

உண்மைகளையும் புள்ளி விவரங்களையும் பார்க்கிறார்கள்.

நமது நாட்டின் வலிமையை பலவீனப்படுத்தக்கூடிய மோசமான உணர்வுகளை அல்ல என்பதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset