செய்திகள் மலேசியா
கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் லாரி தீப்பிடித்து எரிந்தது கடுமையாக போக்குவரத்து நெரிசல்
காராக்
இன்று காலை கோலாலம்பூர்- காராக் (KL-Karak) நெடுஞ்சாலை ஒரு லாரி திடீரென தீப்பற்றியதையடுத்து, தலைநகர் நோக்கிச் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசலால் நிலைக் குலைந்தது.
இச்சம்பவம் காலை 7.24 மணியளவில் நிகழ்ந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் (செயல்பாடுகள்) அக்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
அவசர அழைப்பைப் பெற்றவுடன், ஒரு தீயணைப்பு வாகனம் மற்றும் 10 வீரர்களுடன் உடனடியாகக் களத்திற்கு சென்றதாக அவர் மேலும் சொன்னார்.
தீயணைப்புப் படையினர் காலை 8.08 மணிக்கு சம்பவ இடத்தை வந்தடைந்து, தீயை அணைக்கும் பணியைத் தொடங்கினர். எந்தவொரு உயிரிழப்பும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும், இச்சம்பவம் போக்குவரத்தில் பெரும் நெரிசலை ஏற்படுத்தியது.
குறிப்பாக இந்தப் பகுதியைத் தவிர்த்து மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு பயணிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தீப்பற்றியதற்கான காரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
April 15, 2026, 11:11 am
பிரதமருக்குப் பெருநாள் பரிசு: விமானப் படிக்கட்டில் இருந்து ஓடி வந்த பிரதமர்
April 15, 2026, 10:40 am
நிலையம் மூடப்படவில்லை, வதந்திகளை நம்பாதீர்கள்: கே.பி.டி .என்
April 15, 2026, 10:32 am
அந்தமான் கடலில் பயங்கரம்: 250-க்கும் மேற்பட்ட அகதிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து
April 15, 2026, 10:08 am
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய அரசின் அதிரடி திட்டம்: 2 லட்சம் நெல் விவசாயிகள் பயன்பெறுவர்
April 15, 2026, 9:52 am
போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு மத்தியிலும் காசாவில் ரத்த ஆறு: குழந்தைகள் உட்பட 11 பேர் பலி
April 15, 2026, 9:40 am
பணியில் இருந்தபோது கூர்மையான ஆயுதங்களுடன் வந்த சந்தேக நபர்களால் போலிஸ் அதிகாரி தாக்கப்பட்டார்
April 14, 2026, 9:36 pm
உலகளாவிய எரிசக்தி நெருக்கடி; டீசலுக்கான உதவியை அரசு மேம்படுத்துகிறது: பிரதமர்
April 14, 2026, 9:35 pm
என்னால் நிற்க முடிகிறது; ஆனால் கால்களே இல்லாதது போல் உணர்கிறேன்: துன் மகாதீர்
April 14, 2026, 5:31 pm
