
செய்திகள் மலேசியா
கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் லாரி தீப்பிடித்து எரிந்தது கடுமையாக போக்குவரத்து நெரிசல்
காராக்
இன்று காலை கோலாலம்பூர்- காராக் (KL-Karak) நெடுஞ்சாலை ஒரு லாரி திடீரென தீப்பற்றியதையடுத்து, தலைநகர் நோக்கிச் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசலால் நிலைக் குலைந்தது.
இச்சம்பவம் காலை 7.24 மணியளவில் நிகழ்ந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் (செயல்பாடுகள்) அக்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
அவசர அழைப்பைப் பெற்றவுடன், ஒரு தீயணைப்பு வாகனம் மற்றும் 10 வீரர்களுடன் உடனடியாகக் களத்திற்கு சென்றதாக அவர் மேலும் சொன்னார்.
தீயணைப்புப் படையினர் காலை 8.08 மணிக்கு சம்பவ இடத்தை வந்தடைந்து, தீயை அணைக்கும் பணியைத் தொடங்கினர். எந்தவொரு உயிரிழப்பும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும், இச்சம்பவம் போக்குவரத்தில் பெரும் நெரிசலை ஏற்படுத்தியது.
குறிப்பாக இந்தப் பகுதியைத் தவிர்த்து மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு பயணிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தீப்பற்றியதற்கான காரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
July 16, 2025, 5:16 pm
அம்னோவின் இஷாம் ஜாலில் விடுவிப்புக்கு எதிராக தேசிய சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு தாக்கல்
July 16, 2025, 4:37 pm
கெஅடிலான் கட்சியை அழிப்பது தான் ரபிசியின் உண்மையான நோக்கமா?: டத்தோ அஸ்மான் கேள்வி
July 16, 2025, 4:35 pm
உணவகத்தில் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 65 வயதுடைய முதியவர் கைது: போலிஸ்
July 16, 2025, 4:34 pm
மேக்ஸ் நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்தது: 13 பேர் உயிர் தப்பினர்
July 16, 2025, 4:08 pm
4 மாதங்களில் 2,467 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன: நோரைனி அஹமத்
July 16, 2025, 4:00 pm
269ஆவது மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் கூட்டம்: சிலாங்கூர் சுல்தான் தலைமை தாங்குகிறார்
July 16, 2025, 3:57 pm
திருமண முகாமில் நிர்வாண நிகழ்ச்சி: காவல் துறை உறுதிப்படுத்தியது
July 16, 2025, 3:42 pm
அலுவலக உதவியாளர் RM1.26 லட்சம் இழந்த மோசடி!
July 16, 2025, 3:33 pm