செய்திகள் மலேசியா
கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் லாரி தீப்பிடித்து எரிந்தது கடுமையாக போக்குவரத்து நெரிசல்
காராக்
இன்று காலை கோலாலம்பூர்- காராக் (KL-Karak) நெடுஞ்சாலை ஒரு லாரி திடீரென தீப்பற்றியதையடுத்து, தலைநகர் நோக்கிச் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசலால் நிலைக் குலைந்தது.
இச்சம்பவம் காலை 7.24 மணியளவில் நிகழ்ந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் (செயல்பாடுகள்) அக்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
அவசர அழைப்பைப் பெற்றவுடன், ஒரு தீயணைப்பு வாகனம் மற்றும் 10 வீரர்களுடன் உடனடியாகக் களத்திற்கு சென்றதாக அவர் மேலும் சொன்னார்.
தீயணைப்புப் படையினர் காலை 8.08 மணிக்கு சம்பவ இடத்தை வந்தடைந்து, தீயை அணைக்கும் பணியைத் தொடங்கினர். எந்தவொரு உயிரிழப்பும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும், இச்சம்பவம் போக்குவரத்தில் பெரும் நெரிசலை ஏற்படுத்தியது.
குறிப்பாக இந்தப் பகுதியைத் தவிர்த்து மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு பயணிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தீப்பற்றியதற்கான காரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
March 5, 2026, 5:48 pm
RM4 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்: இரண்டு பேர் கைது
March 5, 2026, 5:47 pm
பயிற்சி தகராறு வன்முறையாக மாறியது: எட்டு பேருக்கு எதிராக இராணுவ வீரர் வழக்கு தொடுத்துள்ளார்
March 5, 2026, 5:46 pm
பாதுகாப்பு காவலர் உரிமை விவகாரம் கைகலகலப்பில் முடிந்தது: 8 பேர் கைது
March 5, 2026, 5:38 pm
உலக போர் விளைவு: மலேசியாவில் உணவு பாதுகாப்பு நிலைமை சீராக உள்ளது
March 5, 2026, 5:36 pm
“முஹைதீன் இனி பிரதமர் வேட்பாளர் அல்ல”: டத்தோ அஹமத் சம்சூரியின் விளக்கம்
March 5, 2026, 5:00 pm
