
செய்திகள் மலேசியா
பிரதமர் அறிவித்த 100 ரிங்கிட் சாரா உதவித் தொகை இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது
கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த 100 ரிங்கிட் சாரா உதவித் தொகை இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு அடையாள அட்டை மூலம் 100 ரிங்கிட் சாரா உதவித் தொகை மக்களுக்கு வழங்கப்படும் என பிரதமர் அறிவித்தார்.
அவ்வகையில் ரஹ்மா அடிப்படை பங்களிப்பு உதவி இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது.
மேலும் 2025 டிசம்பர் 31 வரை நாடு முழுவதும் உள்ள 4,100 க்கும் மேற்பட்ட சாரா வணிக வளாகங்களில் செலவிடலாம்.
குறிப்பாக இது தேர்ந்தெடுக்கப்பட்ட 14 தயாரிப்பு வகைகளின் அடிப்படையில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு பொருந்தும்.
வாழ்க்கைச் செலவுகளின் சுமையைக் குறைப்பதற்கான உடனடி முயற்சியாகவும், மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இது அமைந்துள்ளது.
இதன் மூலம் 22 மில்லியன் குடியிருப்பாளர்கள் 2 பில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 1, 2025, 11:01 am
534 நகர்ப்புற புதுப்பித்தல் இடங்களை மாநில அரசுகள் கெசட் செய்துள்ளன: கோர் மிங்
September 1, 2025, 10:34 am
சாரா 100 ரிங்கிட் உதவித் தொகையை நேற்று 850,000 மலேசியர்கள் பயன்படுத்தியுள்ளனர்: நிதியமைச்சு
September 1, 2025, 10:31 am
சுதந்திர தினத்தை கொண்டாடிய மலேசியர்களுக்கும் பிரதமருக்கும் சீன அதிபர் வாழ்த்துகளை தெரிவித்தார்
August 31, 2025, 9:28 pm
ஜொகூரில் 7ஆவது முறையாக நிலநடுக்கம்: எந்த அதிர்வும் உணரப்படவில்லை
August 31, 2025, 7:32 pm
4 நாள் அலுவல் பயணமாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் சீனா சென்றடைந்தார்
August 31, 2025, 7:31 pm
கம்போங் பாடாங் தேம்பாக் ஸ்ரீ வேட்டை முனீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்திர திருவிழா: விமரிசையாக நடைபெற்றது
August 31, 2025, 7:28 pm
மூவின மக்களின் ஒற்றுமை மேலும் வலுப்பெற வேண்டும்; இதுவே உண்மையான சுதந்திரம்: குணராஜ்
August 31, 2025, 2:37 pm