
செய்திகள் மலேசியா
2025 சுதந்திர தின கொண்டாட்டங்கள் தேசிய கீதத்துடன் தொடங்கியது
புத்ராஜெயா:
2025 சுதந்திர தின கொண்டாட்டங்கள் தேசிய கீதத்துடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
மலேசியா மடானி, மக்கள் நலன் காக்கப்படும் என்ற கருப்பொருளுடன் 2025 தேசிய தின கொண்டாட்டம் புத்ராஜெயாவில் இன்று காலை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
நாட்டின் 68ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்று காலை 8 மணிக்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், அரசியார் ராஜா ஜரித் சோபியா ஆகியோரின் வருகையுடன் இந்த நிகழ்வு தொடங்கியது.
மாமன்னர் தம்பதியர், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உட்பட அனைவரும் பிரதான மேடைக்கு சென்ற பின் தேசிய கீதம் பாடப்பட்டது.
பின்னர் மாட்சிமை தங்கிய மன்னர் பிரதான மரியாதை அணிவகுப்பை ஆய்வு செய்தார்.
ஜாலூர் கெமிலாங் இசையுடன், 14 பீரங்கி குண்டுகளும் முழங்க, தேசிய கீதம் மீண்டும் ஒருமுறை எதிரொலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 1, 2025, 11:01 am
534 நகர்ப்புற புதுப்பித்தல் இடங்களை மாநில அரசுகள் கெசட் செய்துள்ளன: கோர் மிங்
September 1, 2025, 10:34 am
சாரா 100 ரிங்கிட் உதவித் தொகையை நேற்று 850,000 மலேசியர்கள் பயன்படுத்தியுள்ளனர்: நிதியமைச்சு
September 1, 2025, 10:31 am
சுதந்திர தினத்தை கொண்டாடிய மலேசியர்களுக்கும் பிரதமருக்கும் சீன அதிபர் வாழ்த்துகளை தெரிவித்தார்
August 31, 2025, 9:28 pm
ஜொகூரில் 7ஆவது முறையாக நிலநடுக்கம்: எந்த அதிர்வும் உணரப்படவில்லை
August 31, 2025, 7:32 pm
4 நாள் அலுவல் பயணமாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் சீனா சென்றடைந்தார்
August 31, 2025, 7:31 pm
கம்போங் பாடாங் தேம்பாக் ஸ்ரீ வேட்டை முனீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்திர திருவிழா: விமரிசையாக நடைபெற்றது
August 31, 2025, 7:28 pm
மூவின மக்களின் ஒற்றுமை மேலும் வலுப்பெற வேண்டும்; இதுவே உண்மையான சுதந்திரம்: குணராஜ்
August 31, 2025, 2:37 pm