நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இல்லற வாழ்க்கை பிரச்சினைகளை எதிர்கொள்ள பெண்கள் சரியான வழிகளைப்  பின்பற்ற வேண்டும்: நான்சி சுக்ரி

கோலாலம்பூர்:

இல்லற வாழ்க்கை பிரச்சினைகளை எதிர்கொள்ள பெண்கள் சரியான வழிகளைப் பின்பற்ற வேண்டும்.

மகளிர்,   குடும்பம், சமூக மேம்பாட்டுத்துறை  அமைச்சர் நான்சி சுக்ரி இதனை கூறினார்.

இல்லற வாழ்க்கை மன அழுத்தத்தை அனுபவிப்பது அல்லது வீட்டுப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பெண்கள் உதவிகளைப் பெற சரியான வழிகளைப் பின்பற்ற வேண்டும்.

அமைச்சின் கீழ்  பல்வேறு உதவி தளங்கள் இயங்கி வருகிறது. இதில் தாலியன் காசி 15999 அவசர உதவி தொடர்பும் அடங்கும்.

இது அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த ஒரு இடமாக செயல்படுகிறது, இதனால் அவர்கள் பொருத்தமான உதவி,  தலையீடுகளுக்கு வழிவகுக்க உதவுகிறது.

வர்கள் எங்கு செல்ல வேண்டும் என்பது குறித்த ஆலோசனை,  வழிகாட்டுதலை வழங்குவதற்காக அவர்கள் எங்களுடன் இணைய வேண்டும்.

சில நேரங்களில் அவர்கள் சரியான வழிகளை அறியாமல் தவறான இடங்களில் முடிவடைகிறார்கள்.

அவர்கள் மனச்சோர்வடைந்தால் அவர்கள் 15999 ஐத் தொடர்பு கொண்டு, தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தலாம். அங்கிருந்து அவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்படும்.

கோலாலம்பூரில் காசிஹ்னிடா 2025 திட்டத்தைத் தொடங்கிய பின்னர் அவர் இவ்வாறு  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset