நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

eHati நிறுவனத் தலைவர்கள்  காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்த பின் கைது

 

கோலாலம்பூர்,
eHati International Sdn Bhd நிறுவனத்தின் நிறுவனர்களான தியானா தாஹிர் - ரஹீம் ஷுகோர் ஆகியோர், இன்று (ஜூலை 14) பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறையில் வாக்குமூலம் அளித்த பிறகு, ஷா ஆலம் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.


“தமது தரப்பினர் இன்று காலை பெட்டாலிங் ஜெயா காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்தனர். அதன் பிறகு, அவர்களை ஷா ஆலம் காவல்துறையினர் கைது செய்தனர்,” என கைது செய்யப்பட்டவர்களின் வழக்கறிஞர் தெரிவித்தார்..

சட்டப் பிரிவு 294: சமூக ஒழுங்குக்கு எதிரான, அவதூறான பாடல்கள் அல்லது செயல்கள்,  பிரிவு 509: ஒரு நபரின் நாகரிகத்தை அவமதிக்கும் வகையில் சொற்கள் அல்லது சைகைகள், சிறிய குற்றச் சட்டம் பிரிவு 14: பொது அமைதியை பாதிக்கும் சிறிய குற்றச்சாட்டுகள் ஆகியவற்றின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்

இந்த விவகாரம் குறித்து மேலும் விளக்கங்களை பெற, New Straits Times ஊடகம் காவல்துறையின் பதிலை எதிர்பார்ப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset