நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீதிபதிகள் நியமனம்; நாளை அறிவிப்பு வெளியாகலாம்: பிரதமர் நம்பிக்கை

கோலாலம்பூர்:

நீதிபதிகள் நியமனங்கள் குறித்து நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த நம்பிக்கையை தெரிவித்தார்.

ஆட்சியாளர்களின் மன்றத்தை சந்தித்து இந்த விவகாரம் குறித்து நீண்ட விவாதங்களை நடத்தினேன்.

ஆக நீதித்துறை நிறுவனத்தின் பதவிகளை நிரப்ப யார் நியமிக்கப்படுவார்கள் என்பது விரைவில் அறிவிக்கப்படும்.

சமீபத்திய காலியிடப் பிரச்சினையைத் தொடர்ந்து அரசாங்கம் மீதான அனைத்து எதிர்மறையான கருத்துக்களையும் இந்த முடிவு நீக்கும்.

இன்று காலை ஆட்சியாளர்கள் மாநாட்டுடன் நான் நீண்ட நேரம் விவாதித்தேன்.

அவர்கள் முடிவெடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.

மேலும் நாளை சம்பந்தப்பட்ட அனைத்து எதிர்மறையான கருத்துக்களையும் நீக்கும் ஒரு அறிவிப்பு வரும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset