
செய்திகள் வணிகம்
சாதனைப் புரிந்த 3,000 வர்த்தக உரிமையாளர்களை பப்ளிக் கோல்டு கொண்டாடியது: டத்தோ வீரா லூயிஸ் எங்
கோலாலம்பூர்:
சாதனைப் புரிந்த 3,000 வர்த்தக உரிமையாளர்களை பப்ளிக் கோல்டு குழுமம் கொண்டாடியது.
பப்ளிக் கோல்ட் குழுமத்தின் நிறுவனர் டத்தோ வீரா லூயிஸ் எங் இதனை கூறினார்.
மலேசியா, இந்தோனேசியாவில் முன்னணி தங்க வர்த்தக நிறுவனமான பப்ளிக் கோல்ட் விளங்குகிறது.
இந்நிறுவனம் கடந்த ஆண்டு வர்த்தகத்தில் சிறந்த சாதனைகளை பதிவு செய்த 3,000க்கும் மேற்பட்ட தங்க வணிக உரிமையாளர்கள் பிரமாண்டமான கொண்டாடியது.
மைடேக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பப்ளிக் கோல்ட் குழுமத்தின் நிறுவனர், நிர்வாகத் தலைவர் டத்தோ வீரா லூயிஸ் எங், அரோரா இத்தாலியா இன்டர்நேஷனல் பெர்ஹாட்டின் நிர்வாக இயக்குநர் டத்தின் வீரா யுவோன் லிம் ஆகியோர் கலந்து கொண்டு அவர்களை சிறப்பித்தனர்.
கடந்த 2008ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பப்ளிக் கோல்ட், பினாங்கின் புக்கிட் ஜம்பூலில் உள்ள ஒரு சாதாரண கடையில் தனது பயணத்தைத் தொடங்கியது.
அடுத்த 4 ஆண்டுகளுக்குள் இந்நிறுவனம் பாயான் லெபாஸில் உள்ள பிரபலமான தொழில்துறை மண்டலத்தில் அமைந்துள்ள விஸ்மா பப்ளிக் கோல்டில் உள்ள அதன் சொந்த வளாகத்திற்கு விரிவடைந்தது.
இன்று இந்நிறுவனம் கோலாலம்பூரில் உள்ள துன் ரசாக் எக்ஸ்சேஞ்சின் மையத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மெனாரா பப்ளிக் கோல்ட் கட்டிடத்தில் இருந்து செயல்படுகிறது.
மலேசியா முழுவதும் 19 பொது தங்கக் கிளைகளை அது கொண்டுள்ளது.
இந்தோனேசியாவில் 6 கிளைகளும் சிங்கப்பூர், துபாயில் தலா ஒரு கிளைகளும் செயல்படுகிறது.
இது பப்ளிக் கோல்டின் விரைவான வளர்ச்சியையும் உலகளாவிய விலைமதிப்பற்ற தங்கம் சந்தையில் ஒரு முக்கிய சக்தியாக இருப்பதற்கான உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.
RM20 பில்லியனுக்கும் அதிகமான வருவாய்
சமீபத்திய நிதியாண்டில், பப்ளிக் கோல் அசாதாரண வருவாயை 20.58 பில்லியன் ரிங்கிட்டாக பதிவு செய்துள்ளது. இது அதன் வலுவான வளர்ச்சிப் பாதையைக் காட்டுகிறது.
மலேசியா, சிங்கப்பூர், புருனே மற்றும் இந்தோனேசியாவில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்களுடன், பப்ளிக் கோல்ட் இந்தப் பகுதியில் நம்பகமான பிராண்டாக அதன் நற்பெயரை உருவாக்கியுள்ளது.
அவ்வகையில் இம்முறை கிட்டத்தட்ட 23 பிரிவுகளில் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். சாதனையாளர்களுக்கு 15,841,963 ரிங்கிட் மதிப்பிலான விருதுகளும் பரிவுகளும் வழங்கப்பட்டன என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 15, 2025, 11:34 am
நாட்டில் ஆட்டிறைச்சிக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது: மாஹ்ஃபுஸ்
October 8, 2025, 8:54 am
கத்தார் லூலூ மாலில் UPI சேவை தொடக்கம்
October 3, 2025, 11:16 pm
BYD மின்-வாகன விற்பனை சரிவு
October 1, 2025, 9:09 am
ஏர் ஏசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஐரின் ஒமார் சென்ஹெங் இயக்குநர் பதவியில் இருந்து விலகினார்
September 25, 2025, 10:09 pm
மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம் உறுப்பினர்களுக்கான நலத் திட்டங்களை தொடரும்: டத்தோ இப்ராஹிம் ஷா
September 20, 2025, 10:57 am
மும்பையில் புதிய ஐபோன்களை வாங்கும்போது தள்ளுமுள்ளு
September 19, 2025, 2:49 pm
சிங்கப்பூர் - ஜொகூர் பாரு: புதிய டாக்சி சேவை ஆரம்பம்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 12, 2025, 8:51 pm
அமெரிக்காவுடன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
September 11, 2025, 9:39 pm