
செய்திகள் மலேசியா
உணவகங்கள், முடிதிருத்தும் கடைகளில் அதிரடி சோதனை: 24 சட்டவிரோத தொழிலாளர்கள் கைது
கோலாலம்பூர்:
உணவகங்கள், முடிதிருத்தும் கடைகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 24 சட்டவிரோத தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
சிலாங்கூர் மாநில குடிநுழைத் துறை ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்துள்ளது.
கிள்ளான், ஷாஆலமைச் சுற்றியுள்ள மூன்று தனித்தனி இடங்களில் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
இந்த சோதனையில் 24 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.
Ops Dandan, Ops Selera மூலம் சோதனை செய்யப்பட்ட 54 வெளிநாட்டினரில் அவர்கள் ஒரு பகுதியாக இருந்தனர். இது முடிதிருத்தும் கடைகள், உணவகங்களை ஆய்வு செய்வதை இலக்காகக் கொண்டது.
சோதனை செய்யப்பட்ட மூன்று வளாகங்களிலும் முறையே கிள்ளானில் உள்ள பண்டார் புக்கிட் ராஜாவில் உள்ள ஒரு முடிதிருத்தும் கடை, அதே போல் தாமான் சௌஜானாவில் உள்ள இரண்டு உணவகங்கள், ஷா ஆலமில் உள்ள பிரிவு 7 ஆகியவை அடங்கும்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் இந்தியா, மியான்மர், இலங்கையை சேர்ந்தவர்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm