நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலியல் மோசடி,  மிரட்டி பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது;  பாதிக்கப்பட்ட 3 பேர் மீட்கப்பட்டனர்: டத்தோ குமார்

ஜொகூர்பாரு:

பாலியல் மோசடி, மிரட்டி பணம் பறிக்கும்  கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட 3 பேர் மீட்கப்பட்டனர்.

ஜொகூர் மாநில போலிஸ்படைத் தலைவர் டத்தோ எம். குமார்  இதனை கூறினார்.

ஓப் புகில் நடவடிக்கையின் கீழ் பாலியல் மோசடி, இணையத்தில் மிரட்டி பணம் பறித்தல் கும்பலை போலிசார் கண்டுபிடித்தனர்.

இதில் இரண்டு பெண்கள், ஒரு சிறுவன் உட்பட ஒன்பது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஜூன் 20 முதல் ஜூலை 1 வரை ஜொகூர் பாரு,  கூலாய் பகுதியில் நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையைத் தொடர்ந்து 17 முதல் 50 வயதுக்குட்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஆண்டு நவம்பர் முதல் செயல்பட்டு வந்த இந்த கும்பல், போலி சமூக ஊடக கணக்குகளை உருவாக்கி, ஒரு பெண் உறுப்பினர் மாறுவேடமிட்டு பாதிக்கப்பட்டவரை வற்புறுத்துவதற்கு முன்பு, ஆபாச வீடியோ அழைப்புகளைச் செய்துள்ளது.

அதே நேரத்தில், கும்பல் பாதிக்கப்பட்டவரின் மொபைல் போனுக்கு ஒரு இணைப்பை அனுப்பும் என்றும், பாதிக்கப்பட்டவர் அதை அழுத்தும்போது, கைத்தொலைபேசி உள்ள அனைத்து தொடர்பு பட்டியல்கள்,  புகைப்பட கேலரிகளையும் அணுக முடியும் என்றும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset