
செய்திகள் மலேசியா
மலேசிய பேரரசர் இஸ்தானா நெகாரா ஊழியர்களுடன் 2.5 கிலோமீட்டர் விரைவோட்டத்தில் கலந்துகொண்டார்
கோலாலம்பூர்:
மலேசிய பேரரசர் சுல்தான் இப்ராகிம், இன்று இஸ்தானா நெகாரா உறுப்பினர்களுடன் நடைபயணத்தில் (brisk walk) கலந்துகொண்டார்.
இஸ்தானா நெகாராவின் சுற்றுச்சுற்றில் உள்ள 2.5 கிலோமீட்டர் தூரம் நடைப்பயிற்சியில், பேரரசர் கலந்துகொண்டதை பற்றிய தகவல், இஸ்தானா நெகாராவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டது.
இதனை, இஸ்தானா நெகாரா நலவாழ்வு மற்றும் விளையாட்டுக் கழகம் (KEKSIN) ஏற்பாடு செய்திருந்தது.
சுமார் 200 பேர் — இஸ்தானா நெகாராவின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் வள வசதி மேலாண்மை பணியாளர்கள் — இந்நடவடிக்கையில் பங்கேற்றனர்.
பேரரசர் மற்றும் அவரது ஊழியர்கள் இடையேயான நெருக்கத்தை வலுப்படுத்துவதுடன், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கும் நோக்குடன் இது நடத்தப்பட்டது
இந்த நடைபயணத்தில், இஸ்தானா நெகாராவின் அரச குடும்ப கண்காணிப்பாளர் تان سري அஸ்மி ரோஹானி, இஸ்தானா நெகாரா பேரரசர் அலுவலத்தின் மூத்த அதிகாரி டத்தோ அஸுவான் எஃபென்டி ஜைரகித்நைனி, KEKSIN தலைவர் ஜுல்கிஃப்லி யுனுஸ் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
July 17, 2025, 5:21 pm
2026-ஆம் ஆண்டு ஜனவரி முதல் இளைஞர் வயது வரம்பு 30 ஆகக் குறைப்பு: ஹன்னா இயோ
July 17, 2025, 4:48 pm
பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்த இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்
July 17, 2025, 4:36 pm
மலேசிய திறன் சான்றிதழ் வாயிலாக திவேட் பயிற்சிக்கான புரட்சி தொடரும்: ஸ்டீவன் சிம்
July 17, 2025, 4:35 pm
அனைவரும் கோலாலம்பூர் நகரத்தின் தூய்மையைப் பராமரிக்க வேண்டும்: ஜலிஹா முஸ்தாஃபா
July 17, 2025, 4:01 pm
கிளந்தானில் ஓரின சேர்க்கை (Gay) விருந்து: மாநில மரியாதையை களங்கப்படுத்திய செயல்: அம்னோ
July 17, 2025, 3:52 pm