செய்திகள் மலேசியா
பள்ளத்தாக்கில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ஆடவர் கொலை செய்யப்பட்டுள்ளார்: போலிஸ்
ஈப்போ:
பள்ளத்தாக்கில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ஆடவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தாப்பா போலிஸ் தலைவர் ஜொஹாரி யாஹ்யா இதனை தெரிவித்தார்.
தாப்பாவுக்கு அருகிலுள்ள கம்போங் பத்து 23 இல் உள்ள பள்ளத்தாக்கில் நேற்று ஒரு ஆடவரின் உடல் கண்டெடுக்கப்படந்து.
இந்த வழக்கை போலிசார் கொலை வழக்காக வகைப்படுத்தியுள்ளனர்.
ஈப்போவின் ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் தடயவியல் பிரிவு நடத்திய பிரேத பரிசோதனையின் முடிவுகளில் இது உறுதி செய்ய்யப்பட்டது.
பாதிக்கப்பட்டவரின் மரணத்திற்குக் காரணம் ஒரு பொருளால் தாக்கப்பட்டதே என்று கண்டறியப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவரின் தலை, முகம், மார்பு, உடலின் பின்புறம், இரு கைகளிலும் காயங்கள் மற்றும் சிராய்ப்புகள் இருந்தன.
மேலும் மரணத்திற்கான காரணம் ஒரு ஆயுதத்தால் தாக்கப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், சந்தேக நபரைக் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜொஹாரி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 14, 2026, 11:47 pm
நெகிரி செம்பிலானில் நம்பிக்கை கூட்டணி சார்பில் 5 இந்தியர்கள் போட்டி
July 14, 2026, 5:13 pm
நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த சட்டத் திருத்தம்: மலாக்கா அரசிலிருந்து ஜசெக விலகியது
July 14, 2026, 3:48 pm
மலாக்கா மாநில அரசாங்கத்திலிருந்து DAP கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியேறியது
July 14, 2026, 1:13 pm
சிலாங்கூர் மாநிலத்தில் 5 தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலப்பட்டா: பாப்பா ராய்டு வழங்கினார்
July 14, 2026, 11:42 am
