செய்திகள் மலேசியா
கடினமான காலங்களில் தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதாக மிரட்ட வேண்டாம்: ஜாஹித்
கோலாலம்பூர்:
கடினமான காலங்களில் தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதாக மிரட்ட வேண்டாம்.
தேசிய முன்னணி தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.
தற்போது மீட்புப் பணியில் உள்ள தேசிய முன்னணியில் இருந்து வெளியேறும் அச்சுறுத்தலை எந்தவொரு குழுவும் எழுப்பக்கூடாது.
இந்தக் கடினமான காலங்களில், தனது கட்சி மசீச, மஇகா, பிபிஆர்எஸ் ஆகியவற்றை ஓரங்கட்டாது.
அதன் நிலையை வலுப்படுத்த ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும் என்றும் அம்னோ தலைவருமான அவர் கூறினார்.
ஒரு காலத்தில் நாட்டின் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய தேசிய முன்னணி இப்போது 30 நாடாளுமன்ற இடங்களை மட்டுமே கொண்டுள்ளது
அம்னோ (26), மசீச(2), மஇகா, பிபிஆர்எஸ் தலா ஒரு இடத்தைப் பிடித்துள்ளன.
இந்நிலை மாற வேண்டும். தேசிய முன்னணி மீண்டும் வலுப்பெற வேண்டும். இதற்கு அனைவரின் ஆதரவும் தேவை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2026, 5:01 pm
ஜூலை 1 முதல் அனைத்து ஏடிஎம்களிலும் பணம் எடுப்பதற்கு 1 ரிங்கிட் கட்டணம் இல்லை
June 15, 2026, 4:30 pm
புக்கிட் ஜாலிலில் ஆடம்பர குடியிருப்பில் இயங்கிய மினி காசினோ முறியடிப்பு: 15 பேர் கைது
June 15, 2026, 3:45 pm
