
செய்திகள் மலேசியா
கடினமான காலங்களில் தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதாக மிரட்ட வேண்டாம்: ஜாஹித்
கோலாலம்பூர்:
கடினமான காலங்களில் தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதாக மிரட்ட வேண்டாம்.
தேசிய முன்னணி தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.
தற்போது மீட்புப் பணியில் உள்ள தேசிய முன்னணியில் இருந்து வெளியேறும் அச்சுறுத்தலை எந்தவொரு குழுவும் எழுப்பக்கூடாது.
இந்தக் கடினமான காலங்களில், தனது கட்சி மசீச, மஇகா, பிபிஆர்எஸ் ஆகியவற்றை ஓரங்கட்டாது.
அதன் நிலையை வலுப்படுத்த ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும் என்றும் அம்னோ தலைவருமான அவர் கூறினார்.
ஒரு காலத்தில் நாட்டின் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய தேசிய முன்னணி இப்போது 30 நாடாளுமன்ற இடங்களை மட்டுமே கொண்டுள்ளது
அம்னோ (26), மசீச(2), மஇகா, பிபிஆர்எஸ் தலா ஒரு இடத்தைப் பிடித்துள்ளன.
இந்நிலை மாற வேண்டும். தேசிய முன்னணி மீண்டும் வலுப்பெற வேண்டும். இதற்கு அனைவரின் ஆதரவும் தேவை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 4:33 pm
சுங்கை சிப்புட் பள்ளிவாசலில் சமய நல்லிணக்கத்துடன் ஆஷூரா கஞ்சி வழங்கப்பட்டது
July 13, 2025, 4:23 pm
துன் டாக்டர் மகாதீர் தேசிய இருதய கழகத்தில் அனுமதிக்கப்பட்டார்
July 13, 2025, 2:38 pm
உள்ளூர் நடிகையிடம் பாலியல் வன்கொடுமை; பூசாரியின் கடப்பிதழ் முடக்கப்பட்டது: போலிஸ்
July 13, 2025, 2:22 pm
சோர்வு காரணமாக நிகழ்ச்சியிலிருந்து துன் மகாதீர் முன்கூட்டியே வெளியேறினார்
July 13, 2025, 12:35 pm
கோலசிலாங்கூர் கமாசான் தோட்ட ஸ்ரீ மகா துர்கையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது
July 13, 2025, 11:02 am