செய்திகள் மலேசியா
கடினமான காலங்களில் தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதாக மிரட்ட வேண்டாம்: ஜாஹித்
கோலாலம்பூர்:
கடினமான காலங்களில் தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதாக மிரட்ட வேண்டாம்.
தேசிய முன்னணி தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.
தற்போது மீட்புப் பணியில் உள்ள தேசிய முன்னணியில் இருந்து வெளியேறும் அச்சுறுத்தலை எந்தவொரு குழுவும் எழுப்பக்கூடாது.
இந்தக் கடினமான காலங்களில், தனது கட்சி மசீச, மஇகா, பிபிஆர்எஸ் ஆகியவற்றை ஓரங்கட்டாது.
அதன் நிலையை வலுப்படுத்த ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும் என்றும் அம்னோ தலைவருமான அவர் கூறினார்.
ஒரு காலத்தில் நாட்டின் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய தேசிய முன்னணி இப்போது 30 நாடாளுமன்ற இடங்களை மட்டுமே கொண்டுள்ளது
அம்னோ (26), மசீச(2), மஇகா, பிபிஆர்எஸ் தலா ஒரு இடத்தைப் பிடித்துள்ளன.
இந்நிலை மாற வேண்டும். தேசிய முன்னணி மீண்டும் வலுப்பெற வேண்டும். இதற்கு அனைவரின் ஆதரவும் தேவை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 27, 2026, 3:58 pm
ஜொகூர் மாநிலத் தேர்தலில் 56 தொகுதிகளில் 172 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்: தேர்தல் ஆணையம்
June 27, 2026, 2:10 pm
நாளை ஷா ஆலம் இலகு ரயில் போக்குவரத்து 3 (LRT3) வழித்தடத்தை பிரதமர் அன்வார் தொடங்கி வைக்கிறார்
June 27, 2026, 2:00 pm
சுகாதார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது: அமைச்சகம் எச்சரிக்கை
June 27, 2026, 12:12 pm
கெமெலே சட்டமன்றத் தொகுதி: மும்முனை போட்டியில் ரவீன்குமார்
June 27, 2026, 10:00 am
