நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் அல்வாரேஸ் தற்காலிகமாக இடைநீக்கம்

பில்பாவ்:

ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் அல்வாரேஸ் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.

கடந்த மே மாதம் மென்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிரான ஐரோப்பா லீக் போட்டியின் போது அட்லாட்டிகோ பில்பாவ் வீரர் யெரே அல்வாரேஸிடம் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் தோல்வி கண்டதால்  அல்வாரெஸ் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

30 வயதான அல்வாரேஸ், தடை செய்யப்பட்ட பொருளை வேண்டுமென்றே எடுத்துக்கொள்ளவில்லை.

ஏனெனில் அது அலோபீசியா சிகிச்சையின் ஒரு பகுதியாக அவர் எடுத்துக்கொண்ட முடி உதிர்தல் மருந்தில் இருந்தது என்று விளக்கினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset