நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அல் நசர் அணிக்கு ஆதரவாக பாரபட்ச சர்ச்சை மேலும் சூடு பிடிக்கிறது

ரியாத்:

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அணிக்கு நடுவர் அடிக்கடி சாதகமாக நடந்து கொள்வதாக மற்றொரு அல் அஹ்லி வீரர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால்  அல் நசர் அணிக்கு ஆதரவாக நடுவர் செயல்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சை மேலும் தீவிரமடைந்தது.

நேற்று நடந்த விறுவிறுப்பான போட்டியில் அல் நசர் அணி, அல்-அஹ்லி அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இதன் மூலம் அவ்வணி சவூதி புரோ லீக்கை வெல்வதற்கான தனது வாய்ப்புகளை வலுப்படுத்தியுள்ளது.

கிங்ஸ்லி கோமன் சம்பந்தப்பட்ட ஒரு ஃபவுல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தோல்விக்குப் பிறகு நடுவரின் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கிய சமீபத்திய வீரராக துருக்கி தடுப்பாட்ட வீரர் மெரிஹ் டெமிரல் ஆனார்.

முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில், இவான் டோனியும் அவரது அல் அஹ்லி அணி வீரரான கலேனோவும், சவூதி அரேபியாவில் தனது முதல் லீக் பட்டத்தை வெல்லும் முனைப்பில் இருந்த ரொனால்டோவுக்கு நடுவர் கோப்பையை வழங்க முயன்றதாகக் கூறி, இதேபோன்ற ஒரு பிரச்சினையை கிளப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset