நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

குளித்துக்கொண்டிருந்த பெண் மருத்துவர்களை இரகசியமாகப் படம்பிடித்த 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவர் கைது

கொழும்பு:

கொழும்பு நாரஹேன்பிட்டி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த பெண் மருத்துவர்கள் குளிப்பதை இரகசியமாகப் படம்பிடித்த குற்றச்சாட்டில், இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த இரு வீரர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொழில்சார் மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக குறித்த உணவகத்தில் தங்கியிருந்த பெண் மருத்துவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் தமது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி, குளியலறையின் இடைவெளிகள் ஊடாக மருத்துவர்களை இரகசியமாகப் படம்பிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பதிவு செய்யப்பட்ட காணொளிகள் இணையத்திலோ அல்லது சமூக வலைத்தளங்களிலோ பதிவேற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை கிரிக்கெட் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலான இச்சம்பவம் விளையாட்டுத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset