
செய்திகள் மலேசியா
காணாமல் போன பிரிட்டன் இளைஞரைத் தேடும் பணி தீவிரம்: அரச மலேசியப் போலீஸ்படை
கோலாலம்பூர்:
பிரிட்டனைச் சேர்ந்த இளைஞர் காணாமல் போனது தொடர்பாக அரச மலேசியப் போலீஸ்படை விசாரணை மேற்கொண்டு வருவதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறையின் இடைக்கால இயக்குநர் டத்தோ ஃபாடில் மர்சுஸ் தெரிவித்தார்.
கடந்த 7-ஆம் தேதி மலேசியாவிற்கு வந்த David Renz Galletes Balisong என்ற பிரிட்டானிய இளைஞர் காணமல் போனார்.
அவர் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வழியாக மலேசியாவிற்குள் வந்ததாகவும் அவர் இன்னும் நாட்டிலேயே இருக்க கூடும் என்று நம்பப்படுவதாக டத்தோ ஃபாடில் மர்சுஸ் தெரிவித்தார்.
காணாமல் போன இளைஞரை மீட்கும் பணியில் தனது தரப்பு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக அவர் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டினார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்த விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு ஊகங்களையோ அல்லது அறிக்கைகளையோ வெளியிட வேண்டாம் என்று அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 11, 2025, 1:06 pm
பாஸ் தலைவர் பதவியைத் தற்காப்பேன்: ஹாடி அவாங்
July 11, 2025, 12:46 pm
விமர்சனத் திறன் கொண்ட சமூகத்தை உருவாக்க இலக்கியச் சிந்தனை அவசியம்: ஃபட்லினா சிடேக்
July 11, 2025, 12:28 pm
டத்தோஶ்ரீ நஜிப்பிற்கு வீட்டுக்காவல் உத்தரவை மாமன்னர் இணக்கம் வழங்க வேண்டும்: அம்னோ கோரிக்கை
July 11, 2025, 12:23 pm
இயற்கை வளம், சுற்றுச்சூழல் அமைச்சர் பொறுப்பினை ஜொஹாரி கனி வகிப்பார்
July 11, 2025, 12:11 pm
கூடுதலாக 10,000 இலவச மோட்டார் சைக்கிள் ஒட்டுநர் உரிமம்: பி40 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
July 11, 2025, 11:34 am
டிக்டாக் மூலம் RM84,000 கிரிப்டோ மோசடி
July 11, 2025, 11:24 am
சரியான தொகுதியில் போட்டியிட்டால் மசீச மலாய்க்காரர்களின் வாக்குகளைப் பெறும்: Ti Lian Ker
July 11, 2025, 11:24 am
1963ஆம் ஆண்டு துன் மகாதீரின் கையெழுத்துடன் வழங்கப்பட்ட மருத்துவ சான்றிதழ் வைரலாகியது
July 11, 2025, 10:57 am