நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிக்டாக் மூலம் RM84,000 கிரிப்டோ மோசடி 

தங்காக்
டிக்டாக் மூலம் பழகிய நபரின் வழிகாட்டலில், Aloe SGM என்ற கிரிப்டோ முதலீட்டுத் தளத்தில் முதலீடு செய்த 52 வயது பெண், மொத்தம் RM84,000 இழந்தார்.

பாதிக்கப்பட்ட பெண்,  மே 29 முதல் ஜூலை 7 வரை, 17 முறைமையில் பணம் ஐந்து “மியுல் கணக்குகளுக்கு” (mule accounts) மாற்றியதாகவும், பின்னர் ஏமாற்றம் உணர்ந்து போலீசில் புகார் செய்ததாக தங்காக் போலீஸ் தலைவர் ரொஸ்லான் முகமட் தாலிப்  கூறினார்.

“mule accounts” என்பது – குற்றவாளிகள் தங்களை மறைத்துக் கொள்ள வேறு நபர்களின் பெயரில் பயன்படுத்தும் வங்கிக் கணக்குகள் ஆகும். பணம் நேரடியாக குற்றவாளியிடம் செல்லாமல், இந்தக் கணக்குகள் வழியாக இயக்கப்படுவதால் சுலபமாகக் கண்டுபிடிக்க முடியாது.

இந்த வழக்கு, குற்றச் சட்டம் பிரிவு 420ன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் மற்றும் கடுமையான தண்டனை விதிக்கப்படும்.

பொதுமக்கள், விரைவான இலாபம் அளிக்கும் என்கிற சந்தேகத்திற்கிடமான இணைய முதலீடுகளில் ஈடுபடாமல், எந்தவொரு தளத்தையும் முதலீட்டுக்கு முன் சரிபார்க்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset