நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா சட்டமன்றம் நவம்பர் 11-ஆம் தேதி கலையும்: சபாநாயகர்

கோத்தா கினாபாலு:

16-ஆவது சபா மாநில சட்டமன்றம் முன் கூட்டியே கலைக்கப்படாவிட்டால் இவ்வாண்டு நவம்பர் 11-ஆம் தேதி தானாகவே கலைந்து விடும் என்று அம்மாநில சட்டமன்ற சபாநாயகர் ட Datuk Seri Kadzim M Yahya தெரிவித்தார்.

நவம்பர் 11-ஆம் தேதி சட்டமன்றத்தின் 5 ஆண்டுகள் தவணை காலம் நிறைவடைவதாக அவர் குறிப்பிட்டார்.

சட்டமன்றம் தானாகவே கலைக்கப்படும் தேதி குறித்து பொதுமக்களிடையே சில தவறான புரிதல்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்,

சிலர் சபா மாநில சட்டமன்றம் இவ்வாண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி என்று தெரிவித்தனர். அது முற்றிலும் தவறான தகவல் என்று அவர் குறிப்பிட்டார்.

சட்டமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து 60 நாள்களுக்குள் மாநிலத்திற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset