நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மோட்டார் திருட்டு குற்றச்சாட்டு: பள்ளிவாசல் முன்பு இளைஞர்கள் மோதல்

மலாக்கா: 

தங்கா பத்து பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசல் முன்பாக சஹூர் நேரத்தில் இளைஞர்கள் மோதிக் கொண்ட சம்பவம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 4 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

சுமார் 20 பேர் வரை இந்த மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலர் தலைக்கவசத்தை ஆயுதமாக பயன்படுத்தி தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

ஒரு நிமிடம் 21 வினாடிகள் கொண்ட காணொலியில், ஒருவரை தலைக்கவசத்தால் பலமுறை தாக்கியதன் பின்னர் அவர் மயக்க நிலையில் தரையில் விழுந்து கிடப்பது காணப்படுகிறது.

இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட இந்த மோதல், மோட்டார் சைக்கிள் திருட்டில் ஒருவர் தொடர்புடையதாக கூறப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த சம்பவம் குறித்து மலாக்கா மாநில காவல்துறை குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset