செய்திகள் மலேசியா
அரசு பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் கால்பதிப்பதற்கு எஸ்டிபிஎம் சிறந்த தேர்வாகும்: சுரேன் கந்தா
பெட்டாலிங் ஜெயா:
அரசு பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் கால்பதிப்பதற்கு எஸ்டிபிஎம் சிறந்த தேர்வாக அமைகிறது.
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இயக்குநர் சுரேன் கந்தா இதனை கூறினார்.
கிட்டத்தட்ட 43 ஆண்டுகளுக்கு முன் டான்ஸ்ரீ தம்பிராஜா இந்த எஸ்டிபிஎம் விழிப்புணர்வை இந்திய மாணவர்களிடையே ஏற்படுத்தினார்.
தற்போது அரசு பல்கலைக்கழகங்களில் பயில மெட்ரிகுலேசன் வாய்ப்பு கிடைப்பது இல்லை என்ற பிரச்சினைகள் பரவலாக உள்ளது.
ஆனால் அரசு பல்கலைக்கழகங்களுக்கு செல்ல எஸ்டிபிஎம் சிறந்த வாய்ப்பு என்பதை நமது மாணவர்கள் புரியவில்லை.
தேர்வு கடினமானது என்ற காரணத்தால் நமது மாணவர்கள் எஸ்டிபிஎம் கல்வி வாய்ப்பை ஏற்றுக் கொள்வதில்லை.
ஆனால் சிரமப்பட்டு படித்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை பெறலாம் என்பது அவர்களுக்கு புரிவதில்லை.
இதன் அடிப்படையில் தான் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் மீண்டும் எஸ்டிபிஎம் மாணவர்களுக்கான கல்விப் புரட்சியை தொடங்கியுள்ளது.
முதல் கட்டமாக 50 மாணவர்களுடன் இந்த புரட்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
இந்திய மாணவர்கள் எஸ்டிபிஎம் கல்வி வாய்ப்பை தேர்வு செய்ய தூண்டுவது முதல் நோக்கமாகும்.
அதே வேளையில் அனைத்து இந்திய மாணவர்களும் எஸ்டிபிஎம் தேர்வில் 4.0 தேர்ச்சியை பெற வேண்டும்.
இதன் மூலம் அம்மாணவர்களுக்கு தேர்வு செய்யும் பல்கலைக்கழகமும் துறையும் கிடைக்கும்.
இதுவே ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இலக்காகும் என்று சுரேன் கந்தா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 16, 2026, 6:00 pm
தன் மீதான ஐந்து குற்றச்சாட்டுகளை பிள்ளைகள் பராமரிப்பு மையத்தின் உரிமையாளர் மறுத்தார்
April 16, 2026, 5:46 pm
சிறுவர்களுக்குச் சமூக ஊடகத் தடை: ஜூன் மாத இறுதியில் அதிரடியாக அமலாகும் புதிய சட்டம்
April 16, 2026, 5:31 pm
கிரீன் பாக்கெட் நிறுவனத்தின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு
April 16, 2026, 3:43 pm
பிரிக்பீல்ட்ஸில் பட்டப் பகலில் நகைக் கடையில் கொள்ளை: ஆயுதமேந்திய கும்பல் அராஜகம்
April 16, 2026, 3:25 pm
