நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்

கராச்சி: 

பாகிஸ்தானை விட்டு வெளியேறுவதாக  மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அங்கு மைக்ரோசாஃப்ட் சுமார் 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.
அந்நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார சூழலால் இந்த முடிவை மைக்ரோசாஃப்ட் எடுத்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இருந்து 9,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நீக்கப்பட இருப்பதாக இரு நாள்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும் பாகிஸ்தானில் உள்ள அலுவலகம் நிரந்தரமாக மூடப்படுகிறது.

மைக்ரோசாஃப்ட் விரிவாக்க திட்டம் முன்பு வியத்நாமுக்கு சென்றது. தற்போது  மைக்ரோசாஃப்ட் பாகிஸ்தானில் இருந்தே வெளியேறுகிறது என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஆரிஃப் ஆல்வி  கூறினார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset