நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிரியா ஐ.எஸ்.க்கு நிதி திரட்டிய வங்காளதேச போராளி கும்பல்  மலேசியாவில் கைது: ஐஜிபி

புக்கிட் அமான்:

சிரியா ஐ.எஸ். கும்பலுக்கு நிதி திரட்டிய வங்காளதேச போராளி கும்பல் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய போலிஸ்படைத் தலைவர் டத்தோஶ்ரீ காலித் இஸ்மாயில் இதனை கூறினார்.

சமீபத்தில் போலிசார் இக்கும்பல் கைது செய்யப்பட்டனர்.

இக்கும்பல் சிரியாவிலும் அவர்களது நாட்டிலும் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதக் கும்பலை ஆதரிப்பதற்காக நிதி திரட்டி உறுப்பினர்களை சேர்த்து வருவதாக நம்பப்படுகிறது.

தற்போது 150 பேர் அக்கும்பலில் இருப்பதாக நம்பப்படும்.

மேலும் அதன் உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் ஆண்டுக்கு 500  ரிங்கிட் வசூலிப்பதன் மூலம் இந்தக் குழு நிதி திரட்டப்படுகிறது.

சம்பந்தப்பட்ட வங்காளதேசிகள் நாட்டில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமானம், பெட்ரோல் நிலையங்கள் போன்ற தொழிலாளர் துறையில் பணி புரிவதாக அவர் கூறினார்.

முதலில் 100 முதல் 150 நபர்கள் இதில் ஈடுபட்டிருப்பதாக நாங்கள் நம்புகிறோம்.

உறுப்பினர் கட்டணங்களைத் தவிர, அவர்கள் உறுப்பினர்களின் பங்களிப்புகளை நம்பியுள்ளனர். உறுப்பினர் கட்டணங்கள் TnG, bKash,  சர்வதேச பண பரிமாற்ற சேவைகள் மூலம் சேகரிக்கப்படுகின்றன.

புக்கிட் அமானில் இக்கும்பல் மீதான விசாரணையின் முன்னேற்றம் குறித்து ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர்  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset