நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதினுடனான தொலைப்பேச்சு உரையாடல்: எந்தவொரு பலனையும் கொண்டு வரவில்லை- டொனால்டு டிரம்ப் ஆதங்கம் 

வாஷிங்டன்: 

ரஷ்யா அதிபர் விளேடிமீர் புதின் உடனான தொலைப்பேசி உரையாடல் எந்தவொரு பலனையும் கொண்டு வரவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார். 

உக்ரைனில் போர்நிறுத்தம் கொண்டு வருவதற்கு அமெரிக்கா முயற்சி செய்து வரும் நிலையில் தற்போது அந்த முயற்சிக்குக் கடும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த சண்டைக்கான உண்மையான காரணத்தை அறிந்து மாஸ்கோ அதனை தீர்வுக்கான வழிவகுக்கும் என்று கெரம்லின் உதவியாளர் அதிகாரி சொன்னார். 

புதினுக்கு எதிராக குடியரசு கட்சி உறுப்பினர்கள் கடுமையாக சாடி வரும் நிலையில் இது அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்குப் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

NATO கூட்டமைப்பில் உக்ரைன் இணையவில்லை என்றால் இந்த சண்டை நிறுத்தப்படும். மேலும் உக்ரைன் நாட்டிற்கு மேற்கு உலக நாடுகள் உதவிட கூடாது என்று ரஷ்யா தரப்பு தெரிவித்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset