நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுபாங் ஆலம் எல்ஆர்டி நிலையம்: தண்டவாளத்தில் விழுந்த ஆடவருக்குத் தலையில் பலத்த காயம்

ஷா ஆலம்:

இன்று காலை ஷா ஆலம் செக்‌ஷன் 27-இல் அமைந்துள்ள சுபாங் ஆலம் எல்ஆர்டி ரயில் நிலையத் தண்டவாளத்தில் விழுந்த 27 வயது ஆடவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

காலை 8.07 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்துத் தனது தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், ஷா ஆலம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நிலையத்திலிருந்து எட்டு பேர் கொண்ட மீட்புக் குழுவை அங்கு விரைந்ததாகவும் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி செயல்பாட்டு இயக்குநர் Ahmad Mukhlis Mokhtar தெரிவித்தார். 

மீட்புக் குழு சென்றடைவதற்குள் பொதுமக்கள் அந்த ஆடவரைத் தண்டவாளத்தில் இருந்து மேலே கொண்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். 

பாதிக்கப்பட்டவருக்கு சம்பவ இடத்திலேயே அவசர சிகிச்சை அளிக்கப்பட்டதாக  Ahmad Mukhlis Mokhtar கூறினார்.

சம்பந்தப்பட்ட ஆடவர் ரயில் நிலையத்தின் தண்டவாளத்திற்குள் அத்துமீறி நுழைந்ததால் தவறி விழுந்ததாக ராபிட் ரயில் நிறுவனம் தனது தனி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset