
செய்திகள் மலேசியா
மேக்ஸ் 2 நெடுஞ்சாலை ஊழல் வழக்கில் 61 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்: டான்ஶ்ரீ அஸாம் பாக்கி
கோத்தாபாரு:
மேக்ஸ் 2 நெடுஞ்சாலை ஊழல் வழக்கில் 61 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.
எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி இதனை கூறினார்.
மேக்ஸ் 2 எனப்படும் மாஜு விரைவுச்சாலை நீட்டிப்புத் திட்டத்திலிருந்து சுகுக் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பில் எம்ஏசிசி துரிதமாக மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பான விசாரணைக்கு உதவ இதுவரை மொத்தம் 61 சாட்சிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கிற்கான விசாரணை ஆவணங்களை முடிக்க எனது அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக இரண்டு மாதங்கள் அவகாசம் அளித்துள்ளேன்.
விசாரணை ஆவணங்கள் முடிக்கப்பட்டு துணை அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்படுவதற்கு இரண்டு மாதங்கள் கூட ஆகாது என்று நான் நம்புகிறேன், என்று அவர் கூறினார்.
முன்னதாக கடந்த மே 29 அன்று, வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக சுமார் 32 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துக்களை எம்ஏசிசி பறிமுதல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 4, 2025, 5:54 pm
சோலார் வழக்கில் ரோஸ்மாவின் மேல்முறையீட்டு மனுவுக்கு செப்டம்பர் 10ஆம் தேதி தீர்ப்பு
July 4, 2025, 5:49 pm
சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியில் இருந்து விலகும் திட்டம் இல்லை: ஸ்டார் கட்சி திட்டவட்டம்
July 4, 2025, 5:24 pm
KLIA ஏரோ இரயில் பழுதடையவில்லை: மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் விளக்கம்
July 4, 2025, 5:20 pm
நியூஸிலாந்துக்கு ஒரு ஆப்பிளை கடத்தியதாக உம்மி ஐடாவுக்கு 1,000 ரிங்கிட் அபராதம்
July 4, 2025, 5:09 pm
குவாக் ஹுலுவில் கேபள் கார் சேவையா? மாவட்ட அதிகாரி விளக்கம்
July 4, 2025, 5:04 pm
STR பெறுநர்கள் தனியார் கிளினிக்குகளில் இலவசச் சிகிச்சை பெறலாம்
July 4, 2025, 3:28 pm