
செய்திகள் மலேசியா
ஜாலான் மஸ்ஜித் இந்தியா: நில அமிழ்வு தொடர்பான விசாரணை அறிக்கை நிறைவு
கோலாலம்பூர்:
2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் ஏற்பட்ட நிலஅமிழ்வு சம்பவம் தொடர்பான முழு விசாரணை அறிக்கை நிறைவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேசங்களுக்கான அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தபா தெரிவித்தார்.
இந்த முழுமையான விசாரணை அறிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என்றார் அவர்.
தனக்கு முழு அறிக்கை இப்போதுதான் கிடைத்ததாகவும் நிலஅமிழ்வு ஏற்பட்டதற்கான மற்ற காரணங்களைத் தனது தரப்பு ஆய்வு செய்து வருவதாக ஜலிஹா குறிப்பிட்டார்.
முன்னதாக, கடந்தாண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் ஏற்பட்ட நிலஅமிழ்வில் இந்தியாவை சேர்ந்த 48 வயதான விஜயலெட்சுமி புதையுண்டது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 4:58 pm
ரம்லி பர்கர், ஐஸ் உற்பத்தி நிறுவனங்கள் விலை உயர்வை ஒத்திவைக்கிறது: அர்மிசான் அலி
July 3, 2025, 4:15 pm
கோத்தா மடானி மேம்பாட்டு திட்டத்தை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை: ஜலிஹா முஸ்தாபா
July 3, 2025, 3:25 pm
ஈப்போ கொலை வழக்கு: அனைத்துலக குற்றத்துடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது: போலிசார்
July 3, 2025, 3:24 pm
நெடுஞ்சாலையில் வாகனங்களை மறைத்த சம்பவம் தொடர்பில் ஆடவர் கைது
July 3, 2025, 3:12 pm