
செய்திகள் மலேசியா
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு; பெட்ரோனாஸ் பொறுப்பேற்க வேண்டும்: இயோ
பூச்சோங்:
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்திற்கு பெட்ரோனாஸ் இன்னும் பொறுப்பேற்க வேண்டும்.
முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் இயோ பீ யின் இதனை கூறினார்.
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் மண் உறுதியற்ற தன்மையால் ஏற்பட்டது என்று தொழில் பாதுகாப்பு, சுகாதாரத் துறை கண்டறிந்துள்ளது.
இருந்தாலும் இந்த சம்பவத்திற்கான பொறுப்பிலிருந்து பெட்ரோனாஸை விடுவிக்க முடியாது.
நாசவேலை அல்லது குற்றவியல் நோக்கம் எதுவும் இல்லை என்ற அத்துறையின் மதிப்பீட்டை ஏற்றுக்கொண்டாலும் பொறுப்பேற்க எந்த அலட்சியமும் இல்லை என்பதை ஏற்கவில்லை.
குழாய்வழியின் உரிமையாளராக பெட்ரோனாஸ் தங்கள் சொத்துக்கள் அனைத்தும் நல்ல நிலையில் பராமரிக்கப்படுவதை உறுதி செய்திருக்க வேண்டும்.
இந்த அளவிலான பெரிய அளவிலான கட்டமைப்பின் தோல்விக்கு நிலத்தடி நிலைமைகள் ஒரு சாக்காக இருக்கக்கூடாது.
எனவே, புத்ரா ஹைட்ஸ் விபத்தில் ஏற்பட்ட இழப்புகளுக்கு பெட்ரோனாஸ் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 11:33 pm
மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கு; 48 மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டது: ஹுசைன் ஒமார் கான்
July 1, 2025, 11:28 pm
ஹிஷாமுடினின் இடைநீக்கம் குறித்து அம்னோ உச்சமன்றம் விவாதிக்கவில்லை: ஜாஹித்
July 1, 2025, 10:48 pm
பள்ளிக்கு முன் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆடவர் உயிர் தப்பினார்
July 1, 2025, 1:08 pm