நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடல்சார், எல்லை பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை மலேசியா, இந்தோனோசியா தீவிரப்படுத்தும்: பிரதமர்

ஜாகர்த்தா:

கடல்சார், எல்லை பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை மலேசியா, இந்தோனோசியா தீவிரப்படுத்தும்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

சபா,  வளங்கள் நிறைந்த அம்பாலட் தொகுதி உள்ளிட்ட இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் எல்லை, கடல்சார் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்த மலேசியாவும் இந்தோனேசியாவும் ஒப்புக் கொண்டுள்ளன.

நடந்துகொண்டிருக்கும் பேச்சுவார்த்தைகளில், குறிப்பாக கடல்சார் எல்லைகள், அம்பாலட் போன்ற சர்ச்சைக்குரிய பகுதிகளில் கூட்டு மேம்பாட்டு முயற்சிகள் குறித்த பேச்சுவார்த்தைகளில் சபாவின் மூலோபாய பங்கையும் விவாதங்கள் அங்கீகரித்தன.

பரஸ்பர மரியாதை, சட்ட கட்டமைப்புகள்,  இராஜதந்திர ஈடுபாடு மூலம் முக்கியமான பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset