
செய்திகள் மலேசியா
மடானி அரசாங்கம் இந்திய சமுதாயத்தின் தேவைகளை பெரியதாக பூர்த்தி செய்யவில்லை என்பதே உண்மை: டத்தோ டி. மோகன்
கோலாலம்பூர்:
மடானி அரசாங்கம் இந்திய சமுதாயத்தின் தேவைகளை பெரியதாக பூர்த்தி செய்யவில்லை என்பதே உண்மை. இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என்று சுக்கிம் தலைவர் டத்தோ டி. மோகன் கூறினார்.
மூன்று இந்தியர் பாரம்பரிய தொழில் துறைகளுக்கு வழங்கப்பட்ட 7,500 அந்நியத் தொழிலாளர்கள் கோட்டாவில் பல குளறுபடிகள் நிகழ்ந்துள்ளன.
இதற்கு உரிய தீர்வு வேண்டும் என சிகை அலங்கார நிலைய உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ராஜசேகரன் குமுறலுடன் கூறியுள்ளார்.
இப் பிரச்சினை ஒன்று மட்டும் நமது பிரச்சினை அல்ல. இந்திய சமுதாயத்தினரிடையே பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருகின்றன.
இதற்கு இது நாள் வரை எந்த தீர்வும் முழுமையாகக் காணப்படவில்லை.
இந்திய சமுதாயத்தின் பிரதிநிதியாக பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அரசின் பார்வைக்கு எடுத்துச் செல்லக் கூடிய தமிழ் பேசும் அமைச்சர் இல்லாததே இதற்கு எல்லாம் முக்கிய காரணம்.
மடானி அரசாங்கத்தின் ஆட்சியில் இந்திய சமுதாயத்தின் தேவைகள் அனைத்தும் பெரிய அளவில் பூர்த்தி செய்யப்படவில்லை என்பது தான் நமது மனக்குறை.
அதனால் நம் பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு கிடைக்கும் என்று டத்தோ டி. மோகன் கூறினார்.
அந்நியத் தொழிலாளர்களை பொறுத்தவரையில் தேவைப்படுபவர்களுக்கு அவர்கள் கிடைப்பது இல்லை.
ஒரு சிலர் இத் தொழிலாளர்கள் விவகாரத்தை ஆக்கிரமித்து கொள்வது தான் இதற்கு எல்லாம் காரணம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 28, 2025, 11:35 pm
கோல சிலாங்கூர் சாலையோரத்தில் பிளாஸ்டிக் பையில் குழந்தை கண்டெடுக்கப்பட்டது
June 28, 2025, 5:30 pm
அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து மக்களவையில் கேள்வி எழுப்புவேன்: சிவக்குமார்
June 28, 2025, 3:08 pm