நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இன்னும் கடுமையான நடவடிக்கைகளுடன் நாங்கள் மீண்டும் வருவோம்: ஊழல் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் உறுதி

கோலாலம்பூர்:

இன்னும் கடுமையான நடவடிக்கைகளுடன் நாங்கள் மீண்டும் வருவோம் என ஊழல் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் உறுதியுடன் கூறினர்.

ஊழலைக் கட்டுப்படுத்துவதிலும், வாக்குறுதியளிக்கப்பட்ட சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதிலும் மடானி அரசாங்கம் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது.

இது மக்களிடையே ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் ஊழலை எதிர்க்கிறார்கள் 2.0 செயலகத்தின் செய்தித் தொடர்பாளர் பிரெண்டன் கன் இதனை கூறினார்.

நாட்டின் நிர்வாக அமைப்பில் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் தொடர்ந்து வேரூன்ற அனுமதித்ததற்காக அரசாங்கத்தை மக்களின் நம்பிக்கைகளுக்கு துரோகி என குற்றம் சாட்டப்படுகிறது.
 
நிலைநிறுத்தும் மதிப்புகளுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தால் நாங்கள் கோபமாக மட்டுமல்லாமல், வேதனையாகவும் இருக்கிறோம். 

ஊழல் என்பது நிர்வாக முறைகேடு மட்டுமல்ல இறையாண்மை கொண்டதாகக் கூறப்படும் ஒரு நாட்டின் மீதான நம்பிக்கையை மீறுவதாகும் என்று அவர் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset