நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கட்டும் ஆலயங்கள் எல்லாம் கோவில் ஹராம் அல்ல; கோல்பீல்ட்ஸ் ஆலய திருப்பணிக்கு கைகொடுப்பீர்: டத்தோஸ்ரீ தனேந்திரன்

சுங்கைபூலோ:

நாட்டில் கட்டும் ஆலயங்கள் எல்லாம் கோவில் ஹராம் அல்ல. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

மலேசிய மக்கள் சக்தி கடசியின் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் இதனை வலியுறுத்தினார்.

130 ஆண்டு கால வரலாற்றை கொண்ட சுங்கைபூலோ கோல்பீல்ட்ஸ் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் திருப்பணி கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தான் ஆலயத்தின் தலைவர் மணிவண்ணன் என்னை சந்தித்தார்.

இந்த ஆலயத்தின் திருப்பணியில் உள்ள சிக்கல்கள் பணம் நெருக்கடிகள் குறித்து என்னிடம் விளக்கினார்.

அதன் அடிப்படையில் இந்த ஆலய திருப்பணிக்கும் கும்பாபிஷேக விழாவிற்கும் என்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறேன்.

அதை வேளையில் நல்லுள்ளங்களும் பொதுமக்களும் இந்த ஆலய திருப்பணிக்கு உதவ முன் வர வேண்டும்.

மக்கள் கை கொடுத்தால் இந்த ஆலயத்தின் திருப்பணி வெற்றிகரமாக முடிந்து கும்பாபிஷேக விழாவும் சிறப்பாக நடைபெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இந்த ஆலயம் 130 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டதாகும். இதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

காரணம் நாட்டில் கட்டும் ஆலயங்கள் எல்லாம் கோவில் ஹராம் என சித்தரிக்கின்றனர்.

இது தவறான கூற்றாகும். நமது முன்னோர்கள் நிறுவி பல தலைமுறைகளாக வணங்கிய ஆலயங்கள் தான் இப்போது புதுப்பிக்கப்படுகின்றன.

இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset