
செய்திகள் மலேசியா
காதலன் தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததை நேரில் பார்த்த தாய்
கோலாலம்பூர்:
காதலன் தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததை தாய் ஒருவர் நேரில் பார்த்துள்ளார்.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் பாலியல், பெண்கள், குழந்தைகள் பிரிவு முதன்மை உதவி இயக்குநர் சித்தி கம்சியா ஹாசன் கூறினார்.
தனது தாயின் படுக்கையில் இளம் பெண் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது தாயின் காதலனால் பாலியல் வன்கொடுமையுடன் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்.
அவரது தாயார் அதே அறையில் இருந்துள்ளார். அவர்களது வீட்டில் நடந்த இந்த கொடூரத்தை அவர் நேரில் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கு கடந்த ஆண்டு நடுப்பகுதியில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் 14 வயது இளம் பெண் பாதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் தன்னை யாரோ தொடுவதை உணர்ந்ததும் விழித்தெழுந்தாள்.
அவள் கண்களைத் திறந்தவுடன் தன் 36 வயது தாயாரையும் அவரது 61 வயது காதலனையும் தனக்கு அருகில் பார்த்தாள்.
பின்னர் ஆண் சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார்.
அவளுடைய தாயார் சாட்சியாக இருந்தார் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 29, 2025, 3:41 pm
கண்ணதாசன் விழாவில் டத்தோஸ்ரீ தெய்வீகன் உட்பட 5 பேர் சிறந்த சேவையாளருக்கான விருது பெற்றனர்
June 29, 2025, 2:12 pm
மாணவி மணிஷாபிரீத் கொலை வழக்கில் தொடர்புடைய 2 மாணவர்கள் இடைநீக்கம் செயப்பட்டனர்
June 29, 2025, 11:37 am