நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஸ்ரீ ஷுஹைலி மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு இலாகாவிற்கு மாற்றப்பட்டுள்ளார்: குமார் அவர் இடத்தை நிரப்புவார்

கோலாலம்பூர்:

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை  இயக்குநர் டத்தோஸ்ரீ முஹம்மது ஷுஹைலி முஹம்மது ஜைன் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு,  பாதுகாப்பு துறைக்கு
மாற்றப்பட்டுள்ளார்.

வரும் ஜூலை 1ஆம் தேதி தொடங்கி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இது அமலில் இருக்கும்.

2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அப் பதவியை வகித்து வரும் அவர், 2027 ஜூன் 30ஆம் தேதி வரை மலேசிய எல்லைக் கட்டுப்பாடு,  பாதுகாப்பு துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜொகூர் போலிஸ் தலைவர் டத்தோ எம், குமார், ஷுஹைலியின் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் பதவியை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இடமாற்ற உத்தரவு நேற்று இரவு முதல் சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset