
செய்திகள் மலேசியா
கோல்பீல்ட்ஸ் தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆயலத்தின் மகா கும்பாபிஷேகம் அடுத்தாண்டு பிப். 22ஆம் தேதி நடைபெறும்: மணிவண்ணன்
சுங்கைபூலோ:
சுங்கைபூலோ கோல்பீல்ட்ஸ் தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆயலத்தின் கும்பாபிஷேகம் அடுத்தாண்டு பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும்.
ஆலயத்தின் தலைவர் மணிவண்ணன் இதனை தெரிவித்தார்.
கோல்பீல்ட்ஸ் தோட்டப் பாட்டாளின் ஆலயமான விளங்கிய இவ்வாலயம் 130 ஆண்டுகால வரலாற்றை கொண்டதாகும்.
இவ்வாலயத்தில் இதற்கு முன் இரண்டு கும்பாபிஷேக விழாக்கள் நடந்துள்ளது.
மூன்றாவது கும்பாபிஷேக விழாவிற்காக திருப்பணி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது.
பல போராட்டங்களுக்கு பின் ஆலயத்தின் திருப்பணி வேலைகள் 80% பூர்த்தியாகி உள்ளது.
இன்னும் 20 சதவீத வேலைகளுடன் கும்பாபிஷேக விழாவும் நடத்தப்பட உள்ளது.
இதற்கான செலவுக்கு நிதி திரட்டும் வகையில் இன்று நல்லிணக்க விருந்து நிகழ்வு நடைபெற்றது.
நல்லுள்ளங்கள் முழுமையான ஆதரவு கொடுத்துள்ளனர். அதே வேளையில் பொதுமக்களும் பெரிய அளவில் ஆதரவு கொடுப்பார்கள் என நம்புகிறோம்.
எது எப்படி இருந்தாலும் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா அடுத்தாண்டு பிப்ரவரி 22ஆம் தேதி திட்டமிட்டப்படி நடைபெறும் என ஆலய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஆக மக்கள் முழு ஆதரவு தர வேண்டும் என மணிவண்ணன் கூறினார்.
சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ஜூல்கிப்ளியின் சிறப்பு அதிகாரி ஹாஜி, கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை திருமுருகன் ஆலயத் தலைவர் டத்தோ சுரேஸ் உட்பட பல பிரமுகர்கள் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 28, 2025, 11:35 pm
கோல சிலாங்கூர் சாலையோரத்தில் பிளாஸ்டிக் பையில் குழந்தை கண்டெடுக்கப்பட்டது
June 28, 2025, 5:30 pm
அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து மக்களவையில் கேள்வி எழுப்புவேன்: சிவக்குமார்
June 28, 2025, 3:08 pm