
செய்திகள் மலேசியா
பெர்ஹென்தியான் தீவில் படகு கவிழ்ந்ததில் 3 இந்தியர்கள் மரணம்: ஒருவர் கவலைக்கிடம், 9 பேர் காயமடைந்தனர்
பெசுத்:
பெர்ஹென்தியான் தீவில் படகு கவிழ்ந்ததில் 3 இந்தியர்கள் மரணமடைந்தனர்.
மேலும் இச்சம்பவத்தில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதுடன் 9 பேர் காயமடைந்தனர்.
பெசுட் மாவட்ட போலிஸ் தலைவர் அசாமுதீன் அஹமது அபு இதனை உறுதிப்படுத்தினார்.
நேற்று இரவு 10.30 மணியளவில் பூலாவ் பெர்ஹென்தியானில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இந்த சம்பவத்தில் எஸ். ஆறுமுகம் (40), அவரது மகள் ஏ. சர்விஹ்கா (3), அவர்களது உறவினர் வி. வென்பானி (10) ஆகியோர் உயிரிழந்தனர்.
மேலும் ஆறு வயது குழந்தை உட்பட 12 பேர் மேலதிக சிகிச்சைக்காக பெசுட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
புயல், கனமழை, கடல் கொந்தளிப்பின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இதனால் மூன்று முதல் 40 வயதுக்குட்பட்ட 15 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து மூழ்கியது என்று அவர் இன்று பெசுட் மாவட்ட காவல் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
ஆரம்பகட்ட தகவலின் அடிப்படையில், படகில் படகு ஓட்டுநர் உட்பட 16 பேர் பயணித்ததாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 29, 2025, 3:41 pm
கண்ணதாசன் விழாவில் டத்தோஸ்ரீ தெய்வீகன் உட்பட 5 பேர் சிறந்த சேவையாளருக்கான விருது பெற்றனர்
June 29, 2025, 2:12 pm
மாணவி மணிஷாபிரீத் கொலை வழக்கில் தொடர்புடைய 2 மாணவர்கள் இடைநீக்கம் செயப்பட்டனர்
June 29, 2025, 11:37 am