
செய்திகள் மலேசியா
டான்ஸ்ரீ தம்பிராஜா என்ற சகாப்தத்தின் கனவையும் இலக்கையும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தொடரும்: சுரேன் கந்தா
பிரிக்பீல்ட்ஸ்:
டான்ஸ்ரீ தம்பிராஜா என்ற சகாப்தத்தின் கனவையும் இலக்கையும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தொடரும்.
அக்கல்வி நிலையத்தின் இயக்குநர் சுரேன் கந்தா இதனை கூறினார்.
டான்ஸ்ரீ டாக்டர் தம்பிராஜா கடந்த ஜூன் 23ஆம் தேதி சிவபாதம் அடைந்தார்.
இந்நிலையில் இன்று காலை பிரிக்பீல்ட்ஸ் ஸ்ரீ முருகன் கல்வி மையத்தில் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரும் டான்ஸ்ரீ தம்பிராஜாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சுரேன் கந்தா கூறியதாவது,
ஒரு காலத்தில் இந்தியர்கள்பல் என்றால் குண்டர் கும்பல் என்பார்கள்.
ஆனால் டான்ஸ்ரீ தம்பிராஜா அவர்களை நல்லவர்கள். அவர்களாலும் சாதிக்க முடியும் என உறுதியாக கூறினார்.
இந்தியர்கள் கல்வியால் மட்டுமே சாதிக்க முடியும் என திடமான நம்பிக்கையை அவர் கொண்டிருந்தார்.
இதன் அடிப்படையில் தான் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தை அவர் தொடங்கினார்.
இதன் மூலம் கிட்டத்தட்ட 43 ஆண்டுகளாக நாட்டில் மிகப் பெரிய கல்வி புரட்சியை அவர் ஏற்படுத்தியுள்ளார்.
ஆயிரக்கணக்கான பட்டதாரிகளை அவர் உருவாக்கி உள்ளார்.
இன்று அவர் சிவபாதம் அடைந்தாலும் அவர் இன்னமும் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
டான்ஸ்ரீ தம்பிராஜா என்ற சகாப்தத்தின் கனவு இலக்கை நாங்கள் தொடர்வோம்.
குறிப்பாக இந்திய சமுதாயத்திடையே கல்வி புரட்சியை நாங்கள் தொடர்வோம் என்று சுரேன் கந்தா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 29, 2025, 3:41 pm
கண்ணதாசன் விழாவில் டத்தோஸ்ரீ தெய்வீகன் உட்பட 5 பேர் சிறந்த சேவையாளருக்கான விருது பெற்றனர்
June 29, 2025, 2:12 pm
மாணவி மணிஷாபிரீத் கொலை வழக்கில் தொடர்புடைய 2 மாணவர்கள் இடைநீக்கம் செயப்பட்டனர்
June 29, 2025, 11:37 am