
செய்திகள் மலேசியா
கோல சிலாங்கூர் சாலையோரத்தில் பிளாஸ்டிக் பையில் குழந்தை கண்டெடுக்கப்பட்டது
கோல சிலாங்கூர்:
கோல சிலாங்கூர் சாலையோரத்தில் பிளாஸ்டிக் பையில் குழந்தை கண்டெடுக்கப்பட்டது.
கோல சிலாங்கூர் மாவட்ட போலிஸ் தலைவர் அசாஹாருதீன் தாஜுடின் இதனை கூறினார்.
இங்குள்ள புக்கிட் ரோட்டனில் உள்ள கம்போங் அபி அபி, மஸ்ஜித் ஜாமியுல் ஹுடா அருகே சாலையோரத்தில் நேற்று இரவு ஒரு பிளாஸ்டிக் பையில் ஒரு ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது.
அந்தக் குழந்தை பிறந்து சுமார் ஒரு வாரம் ஆகிறது. அக்குழந்தை 2.135 கிலோகிராம் எடை கொண்டது.
அவரது தொப்புள் கொடி சரியான நிலையில் இருந்தது.
முதற்கட்ட விசாரணையில் இக்குழந்தை பொதுமக்களால் ஒரு பிளாஸ்டிக் பையில் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் பரிசோதனைக்காக குழந்தை தற்போது தஞ்சோங் காராங் மருத்துவமனையில் இருப்பதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 28, 2025, 5:30 pm
அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து மக்களவையில் கேள்வி எழுப்புவேன்: சிவக்குமார்
June 28, 2025, 3:08 pm