நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர் 

சென்னை: 

போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக சினிமா உலகமும் தற்போது போலீஸ் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளது. 

போதைப்பொருளுக்கு அடிமையான நடிகர் - நடிகைகளை போலீசார் தற்போது கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், போதைப்பொருள் வழக்கு தொடர்பாக தமிழ்ச்சினிமாவைச் சேர்ந்த நடிகர் கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறை அதிகாரிகள் விடிய விடிய விசாரணையை மேற்கொண்டுள்ளனர். 

நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட பிறகு இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது நடிகர் கிருஷ்ணாவைக் காவல்துறை விசாரித்து வருகின்றனர். நடிகர் கிருஷ்ணாவிற்கு மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட்டது. 

அதனை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா வீட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset