செய்திகள் கலைகள்
ஹைதராபாதில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சிலை திறப்பு
ஹைதராபாத்:
தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாதில் பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சிலை திறக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாதில் உள்ள அரசுக்கு சொந்தமான "ரவீந்திர பாரதி' என்ற கலாசார மையத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிலையை தெலங்கானா மாநில தொழில் துறை அமைச்சர் டி.ஸ்ரீதர்பாபுவும் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடுவும் திறந்துவைத்தனர்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசைப் பேரரசராகத் திகழ்ந்தார். அவர் தனது வாழ்நாளில் 40,000 பாடல்களைப் பாடியுள்ளார். ஜாதி, மத, பிராந்திய வேறுபாடுகளைக் கடந்து அவரது செல்வாக்கு பரவியிருந்தது.
அவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்தவுடன் அதை தெலங்கானா அரசு உடனடியாக ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் ஹரியாணா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண், சகோதரி எஸ்.பி.சைலஜா மற்றும் குடும்பத்தினர் முக்கியஸ்தர்கள், ரசிகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 24, 2026, 3:40 pm
மாரி செல்வராஜ் தயாரிக்கும் புதிய படத்தில் அமீர்
May 21, 2026, 5:29 pm
மகா நடிகை நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்கிறார் ராதிகா
May 19, 2026, 9:36 pm
இசையமைப்பாளர் இளையராஜாவிடம் ‘கருப்பு’ படக்குழு வருத்தம் தெரிவித்தது
May 14, 2026, 5:07 pm
கருப்பு வெளியீடு ரத்தானது குறித்து ஆர்ஜே பாலாஜி கண்ணீர்
May 13, 2026, 5:17 pm
இயற்கையும் கலையும் கை கோர்க்கும் அதிசயம்: திறந்தவெளி கலை அரங்காக மாறும் லங்காவி
May 7, 2026, 6:14 pm
படப்பிடிப்பில் தீபிகா தீவிரம்: வீட்டில் குழந்தையைக் கவனிக்கும் ரன்வீர்
May 7, 2026, 11:49 am
ஆர். பி. சவுத்ரிக்கு திரைத்துறையினர் புகழஞ்சலி
May 5, 2026, 9:43 pm
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி காலமானார்
May 4, 2026, 4:05 pm
