
செய்திகள் மலேசியா
தெஹ்ரான், பாலஸ்தீனத்தைத் தாக்குவதை இஸ்ரேல் நிறுத்தினால் இராணுவ நடவடிக்கையை நிறுத்த ஈரான் தயார்: பிரதமர்
புத்ராஜெயா:
தெஹ்ரான், பாலஸ்தீனத்தைத் தாக்குவதை இஸ்ரேல் நிறுத்தினால் இராணுவ நடவடிக்கையை நிறுத்த ஈரான் தயாராக உள்ளது.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
ஈரான் தலைவர் மசூத் பெஷேஷ்கியனுடன் இன்று தொலைபேசி அழைப்பி உரையாடினார்.
இந்த உரையாடலின் போது சியோனிச ஆட்சி பாலஸ்தீன பிரதேசங்கள், ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்தினால் இஸ்ரேலுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை நிறுத்த தனது நாடு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துதார்.
மசூத் தனது இந்த நிலைப்பாட்டை மற்ற முஸ்லிம் நாடுகளுக்குத் தெரிவிக்க வேண்டும். இதனால் அவர்கள் பாரபட்சமான கதைகளால் பாதிக்கப்படக்கூடாது.
ஈரானின் பழிவாங்கலின் உண்மையான சூழலைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாக பிரதமர் கூறினார்.
சாதாரண குடிமக்கள் மட்டுமல்ல, உயர்மட்ட இராணுவத் தலைமை, ஈரானிய விஞ்ஞானிகளின் உயிரையும் பறித்த காசா, ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம் என்ற தனது நிலைப்பாட்டை மலேசியா தெளிவாக மீண்டும் வலியுறுத்தியது என்றும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 25, 2025, 12:36 pm
மெனாரா இல்ஹாம் சொத்துரிமை வழக்கு: எம்ஏசிசி இன்று மனு தாக்கல்
June 25, 2025, 12:22 pm
வழக்குகளைக் கையாள கூடுதல் அரசு துணை வழக்கறிஞர்கள் தேவை: அசாம் பாக்கி
June 25, 2025, 10:59 am
ஊழல், பணமோசடி குற்றச்சாட்டுகள்: சையத் சாதிக்கை விடுவிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு
June 25, 2025, 10:10 am