நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மெனாரா இல்ஹாம் சொத்துரிமை வழக்கு: எம்ஏசிசி இன்று மனு தாக்கல்

கோலாலம்பூர்:

மெனாரா இல்ஹாம் சொத்துரிமையைப் பறிமுதல் செய்ய எம்ஏசிசி இன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என்று எம்ஏசிசியின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி கூறினார்.

இந்த மனு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னாள் நிதியமைச்சர் துன் டைய்மின் குடும்பத்துடன் தொடர்புடைய நாட்டில் உள்ள பிற சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான விண்ணப்பங்களையும் தாக்கல் செய்ய எம்ஏசிசி திட்டமிட்டுள்ளது என்றும் கூறினார்.

மெனாரா இல்ஹாம் கட்டடத்தின் சொத்துரிமை பறிமுதல் நடவடிக்கை எந்தச் சட்டப்பிரிவின் கீழ் (பிரிவு 55 அல்லது 56) மேற்கொள்ளப்படும் என்பது குறித்து அவர் தெளிவாகக் கூறவில்லை.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset