நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சையத் சாடிக் விடுவிப்பு: தீர்ப்பை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்

கோலாலம்பூர்:

மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாடிக் சையத் அப்துல் ரஹ்மானை ஊழல், பணமோசடி ஆகிய 4 குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பு கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எம்ஏசிசி-யின் தலைமை ஆணையர் தான்ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார். 

இந்த வழக்கு விசாரணையைக் கூட்டரசு நீதிமன்றத்திற்கு மாற்ற முன்பே திட்டம் இருந்ததாக அரசுத் துணை வழக்கறிஞர் கூறியதை அசாம் பாக்கி சுட்டிக் காட்டினார்.

இன்றைய முடிவு தங்களுக்குச் சாதமாக அமையாவிடின், அதனை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டிய சூழல் இருக்கும் என்று அரசுத் துணை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தான் விசாரிக்கும் வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது தனக்கு எந்தத் தனிப்பட்ட உணர்வுகளும் இல்லை என்று அசாம் விளக்கமளித்தார்.

எந்தவொரு வழக்கையும் விசாரிக்கும்போது எனக்கு ஏமாற்றமோ மகிழ்ச்சியோ ஏற்படுவதில்லை என்று அவர் கூறினார்.

முன்னதாக, ஊழல், பணமோசடி ஆகிய 4 குற்றச்சாட்டுகளிலிருந்து மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மானை ஒருமனதாக விடுவிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Datuk Ahmad Zaidi Ibrahim தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற குழு முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான சையத் சாதிக்கின் மேல்முறையீட்டு விண்ணப்பத்தை ஏற்று அவரைக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்க உத்தரவிடுவதாக தெரிவித்தது. 

சையத் சாதிக்கிற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் அவர் குற்றம் செய்தவர் என்பதை அரசு தரப்பு நிரூபிக்க தவறியதாகவும் தீர்ப்பை வாசித்த நீதிபதி Datuk Noorin Badaruddin கூறினார். 

சையத் சாடிக் குற்றவாளி என்பதைச் நிரூபிக்க தேவையான சட்டப்பூர்வ கூறுகளையும், ஆதாரங்களையும் கீழ்நிலை நீதிமன்றம் சரியாக மதிப்பீடு செய்யவில்லை என்றும் Datuk Noorin Badaruddin தெரிவித்தார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset