
செய்திகள் மலேசியா
நெடுஞ்சாலை சுகும் நிதி; 11 மில்லியன் ரிங்கிட் டிஜிட்டல் பணத்தை எம்ஏசிசி கண்டுபிடித்துள்ளது: டான்ஶ்ரீ அசாம் பாக்கி
புத்ராஜெயா:
நெடுஞ்சாலை சுகும் நிதி தொடர்புடையதாக நம்பப்படும் 11 மில்லியன் ரிங்கிட் டிஜிட்டல் பணத்தை எம்ஏசிசி கண்டுபிடித்துள்ளது.
எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி இதனை கூறினார்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் நெடுஞ்சாலை கட்டுமான சுகுக் நிதியை டான்ஸ்ரீ ஒருவர் நெடுஞ்சாலை சலுகை பெற தவறாகப் பயன்படுத்தியதன் விளைவாக இந்த பணம் கண்டறிந்துள்ளது.
சுகுக் நிதி பெறப்பட்ட பிறகு சம்பந்தப்பட்ட பணம் டிஜிட்டல் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது விசாரணையில் கண்டறிந்ததாக எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.
நெடுஞ்சாலை சுகுக் நிதியிலிருந்து வந்ததாக சந்தேகிக்கப்படும் 11 மில்லியன் ரிங்கிட்டை பயன்படுத்தியதை எம்ஏசிசி கண்டறிந்துள்ளது.
சம்பந்தப்பட்ட நிதி டிஜிட்டல் நாணயம் வடிவில் பயன்படுத்தப்பட்டு பிற நோக்கங்களுக்காக செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், பணம் எவ்வாறு திரும்பப் பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டது என்பதை நாங்கள் கண்காணித்து வருகிறோம் என்று அவர் இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 25, 2025, 8:25 pm
50 மலேசியத் தமிழ் எழுத்தாளர்களை கெளரவிக்கும் மாபெரும் விழா ஆகஸ்ட் 23இல் நடைபெறும்: காளிதாசன்
June 25, 2025, 7:59 pm
தேர்தலிலிருந்து யாரும் வாபஸ் பெறவில்லை: வழக்கறிஞர் மதியழகன்
June 25, 2025, 12:36 pm