
செய்திகள் மலேசியா
வழக்குகளைக் கையாள கூடுதல் அரசு துணை வழக்கறிஞர்கள் தேவை: அசாம் பாக்கி
கோலாலம்பூர்:
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எம்ஏசிசி தற்போது கையாளும் அதிக அளவிலான வழக்குகளை நிர்வகிக்க கூடுதல் அரசு துணை வழக்கறிஞர்கள் (DPP) தேவை என்று எம்ஏசிசியின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி கூறினார்.
அரசு துணை வழக்கறிஞர்கள் அதிகளவிலான வழக்கு விசாரணைகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
அதனால் கூடுதல் அரசு துணை வழக்கறிஞர்கள் தேவை குறித்துச் சட்டத்துறை அலுவலகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அசாம் பாக்கி குறிப்பிட்டார்.
சுமார் 40 அரசு துணை வழக்கறிஞர்கள் தற்போது பணியில் உள்ளனர். பொது சேவை துறை 45 அரசு துணை வழக்கறிஞர்களான பணியிடங்களை வழங்கியது.
தற்போது தங்களிடம் சுமார் ஐந்து காலியிடங்கள் உள்ளன என்று அவர் சுட்டிக் காட்டினார்.
கூடுதல் அரசு துணை வழக்கறிஞர்களின் நியமனம் ஒட்டுமொத்த பணிச்சுமையைக் குறைக்க முடியும் என்று எம்ஏசிசி தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 25, 2025, 12:36 pm
மெனாரா இல்ஹாம் சொத்துரிமை வழக்கு: எம்ஏசிசி இன்று மனு தாக்கல்
June 25, 2025, 10:59 am
ஊழல், பணமோசடி குற்றச்சாட்டுகள்: சையத் சாதிக்கை விடுவிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு
June 25, 2025, 10:10 am