நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் விரிவான மாற்றத்தை உணர பிரதமருக்கும் மடானி அரசாங்கத்திற்கும் போதுமான நேரம், இடம் வலுவான ஆதரவை வழங்க வேண்டும்: குணராஜ்

செந்தோசா:

நாட்டின் விரிவான மாற்றத்தை உணர பிரதமருக்கும் மடானி அரசாங்கத்திற்கும் போதுமான நேரம், இடம் வலுவான ஆதரவை வழங்க வேண்டும்.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் கெஅடிலான் உச்சமன்ற உறுப்பினருமான குணராஜ் வலியுறுத்தினார்.

மெர்டேகா மையத்தின் சமீபத்திய ஆய்வில்  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமையின் மீது 55% நேர்மறையான ஆதரவு மதிப்பீட்டைக் காட்டுகிறது.

இது அரசியல் நிலைத்தன்மை, கொள்கைகளின் ஒருமைப்பாடு,  நாட்டிற்கான ஒரு புதிய பார்வை ஆகியவற்றில் மக்களின் வளர்ந்து வரும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

சீர்திருத்தங்களுக்கு இரண்டு காலாண்டுக்கும் மேலாக அழுத்தம் கொடுத்த பிறகு ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் மலேசியாவின் பெயரை அனைத்துலக அளவில் நிலைநிறுத்துவதிலும் மடானி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மக்கள் இப்போது காண்கிறார்கள்.

நாடாளுமன்ற சேவைகள் சட்டம் 2025 இன் திருத்தம், ஆசியான்ன்  2025 இன் தலைவராக ஒரு தீவிரமான பங்கு அத்துடன் சீனாவுடனான நெருக்கமான ஒத்துழைப்பு போன்ற முயற்சிகள் பிரதமரின் நேர்மை, அதிகாரபூர்வமான இராஜதந்திரத்துடன் கூடிய நிர்வாகத்தில் நிலைத்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

வாழ்க்கைச் செலவு ஒரு பெரிய சவாலாக இருந்தாலும் குறைந்தபட்ச ஊதிய உயர்வு, அரசு ஊழியர்களுக்கு பண உதவி,  தேர்ந்தெடுக்கப்பட்ட எரிபொருள் மானியங்கள் போன்ற மக்கள் சார்பு நடவடிக்கைகளை மக்கள் பாராட்டுகிறார்கள்.

பொருளாதார செயல்திறனும் வலுவடைந்து வருகிறது. பணவீக்கம் மூன்று ஆண்டுகளில் மிகக் குறைவாக  (1.4%) பதிவாகியுள்ளது. முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4.4% ஐ எட்டியது.

ஆக  நாட்டின் விரிவான மாற்றத்தை மேலும்  உணர பிரதமருக்கும் மடானி அரசாங்கத்தின் தலைமைக்கும் போதுமான நேரம், இடம்,  வலுவான ஆதரவை அனைத்து தரப்பினரும் வழங்க வேண்டும்.

மலேசியா இப்போது சரியான பாதையில் உள்ளது. நாட்டிற்கு மிகவும் புகழ்பெற்ற எதிர்காலத்திற்கான சீர்திருத்த முயற்சிகளை ஆதரிப்பதில் நாம் ஒன்றுபடுவோம் என்று குணராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset