
செய்திகள் மலேசியா
இஸ்மாயில் சப்ரிக்கு எதிரான விசாரணை முடிந்தது; 170 மில்லியன் ரிங்கிட்டை பறிமுதல் செய்ய எம்ஏசிசி விண்ணப்பிக்கும்: டான்ஶ்ரீ அசாம் பாக்கி
புத்ராஜெயா:
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி மீதான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தனது விசாரணையை முடித்துள்ளது.
எம்ஏசிசி தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி இதனை கூறினார்.
டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரிக்கு எதிரான விசாரணையை அதிகாரிகள் முழுமையாக முடித்து விட்டனர்.
அதே வேளையில் இந்த வழக்கில் துணை அரசு வழக்கறிஞர் 170 மில்லியன் ரிங்கிட்டை பறிமுதல் செய்ய விண்ணப்பம் தாக்கல் செய்ய ஒப்புக் கொண்டது என அவர் சுருக்கமாக கூறினார்.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் எம்ஏசிசி பல்வேறு சர்வதேச பணமான சுமார் 170 மில்லியன் ரிங்கிட் ரொக்கத்தையும், கிட்டத்தட்ட 7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 16 கிலோகிராம் தங்கக் கட்டிகளையும் காட்சிப்படுத்தியது.
இஸ்மாயில் சப்ரி சம்பந்தப்பட்ட ஊழல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக, ஒரு பாதுகாப்பு இல்லம் உட்பட மூன்று வளாகங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மில்லியன் ரிங்கிட் ரொக்கம், மதிப்புமிக்க பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக எம்ஏசிசி வெளிப்படுத்திய பின்னர் இந்தப் பணம் காட்சிப்படுத்தப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் பாத், ரியால், பவுண்ட் ஸ்டெர்லிங், வோன், யூரோ, சுவிஸ் பிராங்க், யுவான் ஆகியவற்றின் மதிப்புகள் உள்ளதாக எம்ஏசிசி தெரிவித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 25, 2025, 7:59 pm
தேர்தலிலிருந்து யாரும் வாபஸ் பெறவில்லை: வழக்கறிஞர் மதியழகன்
June 25, 2025, 12:36 pm
மெனாரா இல்ஹாம் சொத்துரிமை வழக்கு: எம்ஏசிசி இன்று மனு தாக்கல்
June 25, 2025, 12:22 pm