
செய்திகள் மலேசியா
ஜம்ரி மீண்டும் தேசிய முன்னணி பொதுச் செயலாளராகவும், ஜொஹாரி பொருளாளராகவும் நியமிக்கப்பட்டனர்
கோலாலம்பூர்:
தேசிய முன்னணியின் பொதுச் செயலாளராக டத்தோஶ்ரீ ஜம்ரி அப்துல் காதிரும் பொருளாளராக டத்தோஶ்ரீ ஜொஹாரியும் நிகமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய முன்னணி உச்சமன்ற தலைவர்கள் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அதன் பொதுச் செயலாளர் டத்தோஶ்ரீ ஜம்ரி அப்துல் காதிர் ஓர் அறிக்கையில் கூறினார்.
தேசிய முன்னணி சட்டத்தின் பிரிவு 8.3(டி), 8.3(இ) ஆகியவற்றின்படி இந்த நியமனங்கள் செய்யப்பட்டது.
கட்சியை உள்ளடக்கிய அரசியல் தளமாக வலுப்படுத்தவும், தேசிய முன்னணியின் குடையின் கீழ் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற உறுதியை நிலைநாட்டவும் இந்த கூட்டம் நடைபெற்றது.
மேலும் விரைவில் நடைபெறவிருக்கும் சபா மாநிலத் தேர்தலுக்கு தேசிய முன்னணி தனது முழு தயார்நிலையையும் உறுதிப்படுத்தியது.
சபாவின் அரசியல் ஸ்திரத்தன்மை, மாநில மக்களின் பாதுகாப்பு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வை வலுப்படுத்துவதற்கு முக்கியமாகும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 25, 2025, 12:36 pm
மெனாரா இல்ஹாம் சொத்துரிமை வழக்கு: எம்ஏசிசி இன்று மனு தாக்கல்
June 25, 2025, 12:22 pm
வழக்குகளைக் கையாள கூடுதல் அரசு துணை வழக்கறிஞர்கள் தேவை: அசாம் பாக்கி
June 25, 2025, 10:59 am
ஊழல், பணமோசடி குற்றச்சாட்டுகள்: சையத் சாதிக்கை விடுவிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு
June 25, 2025, 10:10 am